• Home  /  
  • Learn  /  
  • உங்கள் குழந்தையின் தேவையை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?
உங்கள் குழந்தையின் தேவையை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?

உங்கள் குழந்தையின் தேவையை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?

18 Apr 2019 | 1 min Read

Anuja Kapoor

Author | 1 Articles

 

நீக்குதல் தொடர்பாடல் என்பது குழந்தை பராமரிப்பாளர் குழந்தையின் தேவைகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு வேண்டிய தேவைகளைப் பூர்த்தி செய்வதே ஆகும். அந்த தேவைகளானது எதுவாகவும் இருக்கலாம். தூக்கம் வருது! பசிக்குது! பாத்ரூம் போகணும்! இது போன்ற எதுவாகவும் இருக்கலாம்.

 

இந்த நீக்குதல் தொடர்பாடல் குறித்து எனக்கு மிகவும் தெளிவான கருத்து இருக்கிறது. பிறந்த குழந்தைகள் மற்றும் சிறிய குழந்தைகள். என்னை பொறுத்தவரை, இவர்களுக்கும் பராமரிப்பாளர்களுக்கும் நல்ல உடன்பாடு வேண்டும். ஏன் குழந்தை பிறந்தவுடனே நான் இதைக் குறித்து மிகவும் தீவிரமாக ஆராய்ந்தேன். நான் இருப்பது ஒரு தனிக்குடித்தனத்தில். மற்றவர்களின் உதவி இல்லாமல் ஏன் குழந்தையை நானே வளர்க்க வேண்டும் என்பதே ஏன் முடிவு. அப்போதுதான், ஏன் குழந்தையின் விருப்பு வெறுப்புகளைப் புரிந்துகொள்ள முடியும். ஏன் முதல் குழந்தை ஆனதால் எனக்கு எந்த அனுபவமும் இல்லை. ஏன் உள்ளுணர்வைதான் நான் நம்ப வேண்டி இருக்கு.

 

நீக்குதல் தொடர்பாடல் என்பது மிகவும் சிக்கலானது. அத்தனை எளிதல்ல. அதே நேரம், சரியான குழந்தை பராமரிப்பாளர் உங்களுக்குக் கிடைத்து விட்டால் அதுவே மிகவும் எளிதும், ஆசிர்வாதமும் கூட.

 

நாள் ஒன்று முதற்கொண்டு ஏன் குழந்தை, தன் செய்கையால் ‘எனக்கு பசிக்குது!’ என்று உணர்த்தும்போதுதான், நான் சாப்பாடு அளித்திருக்கிறேன். தனக்கு என்ன வேண்டும் என்று குழந்தைகளுக்குப் பிறந்தவுடனே நன்றாக தெரியும். அவ்வாறே தனது உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வர்.

 

பசித்தால் குழந்தை எப்போதும் அழாது. ஆனால் பல தாய்மார்கள் அதைப் புரிந்துகொள்ளாமல் உடனே சோறூட்ட ஆரம்பித்து விடுவார்கள். ஒரு குழந்தையை நாம் முதிர்ந்தோர் போல உணவளிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இந்த குறிப்பு பல தாய்மார்களுக்குத் தெரியவே தெரியாது.

 

குழந்தைகள் கீழ்க்கண்ட காரணங்களுக்காவும் அழுவார்கள். அவை என்னவென்று காண்போம்:

 

  • வயிற்றுவலி காரணமாக தூக்கமிழந்து மதிய வேளைக்குப் பிறகு அழ ஆரம்பிப்பார்கள்
  • ஈரமான டைப்பர்
  • வெப்பநிலையில் மாற்றம் (அதிக வெயில் அல்லது குளிர்)
  • அறையில் அதிக வெளிச்சம் (மஞ்சள் லைட் ஒளிமிக்க வெள்ளை நிற லைட்டை விட இனிது)
  • அமிலப் பின்னோட்ட நோய் (ஆஸிட் ரிஃப்ளக்ஸ்)

 

அதிக நேரம் சோறு உண்பது பசிக்காக இல்லை, ஒரு ஜாலிக்காக தான்.

 

நீக்குதல் தொடர்பாடல் என்ற இந்த உத்தியை வெகு சீக்கிரமாகவே ஏன் குழந்தையிடம் காட்ட தொடங்கிவிட்டேன். ஆதலால், ஒரு சரியான பட்டியலைப் பின்பற்ற விடுமுறை காலங்களிலும் உதவியாக இருந்தது. எடுத்துக்காட்டாக, தாகமாக இருக்கிறது என்று எப்படி செய்கையால் காட்டுவது? தண்ணீர் பாட்டிலைக் காட்டி குடிப்பதைப் போல செய்கையைக் காட்டினால், தாகம் எடுக்கிறது என்றே அர்த்தம். இச்செய்கையில் ஏன் குழந்தை இப்போது நன்றாக தேர்வு பெற்றுவிட்டான்.

 

நீக்குதல் தொடர்பாடல் – எப்படி தொடங்குவது?

 

  • இந்த பழக்கத்தைத் தொடங்குவதற்கு முன் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் ஒரே எண்ணத்துடன் தெளிவாக இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைக்கு எந்த விட குழப்பமும் இருக்காது.
  • ஒவ்வொரு தடவையும் உங்கள் குழந்தையிடம் பேசும்போது செய்கையுடன் காட்டவும். அப்போதுதான் அதைக் குழந்தையால் நன்றாக புரிந்து கொள்ள முடியும்.
  • குழந்தையின் செய்கையை நன்றாக கவனிக்கவும். தூக்கம் வருது என்றால் காதையும் கண்ணையும் பயங்கரமாக தேய்ப்பார்கள். பசியென்றால், சற்று சிடுசிடுவென இருப்பார்கள். மற்றவர்களின் செயலில் அத்தனை கவனம் செலுத்த மாட்டார்கள்.
  • அதேபோல, மலங்கழிக்கவும் தகுந்த செய்கையைக் காண்பிப்பார்கள். குழந்தைகள் குசு விட்டால், மலங்கழிக்க வேண்டும் என்பதே அர்த்தம்.

 

நீக்குதல் தொடர்பாடல் – பலன்கள்:

  • பராமரிப்பாளருக்கும் குழந்தைக்கும் இடையே ஒரு நல்ல உறவு ஏற்படும்.
  • சுய மதிப்பைக் கூட்டும். தன்னை நன்றாக புரிந்து கொண்டனர் என்ற மன நிம்மதியும் கிட்டும்
  • பராமரிப்பாளருக்கும் எளிதாக குழந்தையைக் கையாள முடியும்
  • குழந்தைக்குத் வேண்டியதை சரியாக தெரிவிக்கும் திறனும், அதைச் சுயமாக செய்யும் திறனும் வளரும்

 

நீக்குதல் தொடர்பாடல் என்ற பயிற்சி மூலம் குழந்தைகளால் சுயமாக மலங்கழிக்க முடியும். பல குழந்தைகளும் 1.5 வயது அடைவதற்குள் சுயமாகவும் எவர் உதவியும் இல்லாமல் மலங்கழிக்க கற்றுவிடுகின்றனர். எனக்கு இது மிகவும் சீக்கிரம் என்று தோன்றுகிறது. இது அவரவரின் தனிப்பட்ட எண்ணம்.

 

எப்போதிலிருந்து இந்த நீக்குதல் தொடர்பாடல் பயிற்சியைத் தொடங்க வேண்டும்?

 

பிறந்த முதல் நாளிலிருந்தே தொடங்கி விடலாம். சரியாக கற்றுத் தந்தால் நல்ல பலன் உண்டு. ஆனால் அவசரப்படக் கூடாது. பொறுமை அவசியம். முக்கியமாக நான் சொல்ல விரும்புவது ஒன்று தான். குழந்தையை நன்றாக கவனிக்கவும். கவனித்தால்தான் அவர்களால் புரிந்துகொள்ள  முடியும்.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.