• Home  /  
  • Learn  /  
  • கர்ப்ப காலங்களில் உச்சரிக்க வேண்டிய மந்திரங்களும் பலன்களும்
கர்ப்ப காலங்களில் உச்சரிக்க வேண்டிய மந்திரங்களும் பலன்களும்

கர்ப்ப காலங்களில் உச்சரிக்க வேண்டிய மந்திரங்களும் பலன்களும்

7 May 2019 | 1 min Read

Dr. Mrinalini

Author | 86 Articles

 

கர்ப்பிணிகள் தம் கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியுடனும், நல்ல மனநிலையுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும்  இருந்தால்தான் பிறக்கப்போகும் குழந்தையும் நல்ல மனநிலையுடன் பிறப்பான் என்பது உலகில் நிலவி வரும் உண்மை. ஆதலால், கர்ப்பிணிகள் இந்நேரங்களில் நல்ல பாட்டுகள் கேட்க வேண்டும். அதிக மந்திரங்களையும் உச்சரிக்க வேண்டும். நிம்மதியாக இருக்க யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

 

மந்திரங்கள் உச்சரிப்பதால் என்ன பலன்கள் ஏற்படும்?

 

  • கருவிலிருக்கும் குழந்தையின் மனநலன் மற்றும் உடல்நலன் மேம்படும்
  • நேர்மறையான சக்தி பிறக்கும்
  • மனதில் தூய்மையும், நிம்மதியும் ஏற்படும்
  • தாயுடன் சேர்ந்து கருவிலிருக்கும் சேயும் மேலே குறிப்பிட்ட அத்தனை வகை பலன்களையும் அனுபவிப்பார்கள்

 

கர்ப்ப காலங்களில் மந்திரம் உச்சரிக்கும்போது ஏதேனும் இருக்கை முறை கடைப்பிடிக்க வேண்டுமா?

 

  • ஆமாம். கீழே தரையில் பத்மாசன முறையில் அமரலாம். இல்லையெனில், டேபிள் மீது இருந்தும் செய்யலாம்.
  • கைகள் இரண்டையும் முழங்கால் மீது வைத்து கொள்ள வேண்டும்.
  • உள்ளங்கையை மேல் நோக்கி இருக்குமாறு காட்டவும்
  • கியான் முத்திரையைக் காட்டவும் (கட்டைவிரலும் ஆட்காட்டி விரலும் நுனியைத் தொடும்படி லேசாக அழுத்தம் தரவும்).

 

கர்ப்ப காலங்களில் அடிப்படையாக உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள் என்ன?

 

ஓம் மந்திரமும் அதன் பலன்களும்

 

  • ‘ஓம்’ என்கிற இந்த மந்திரத்தை நேரம் கிடைக்கும்போதேல்லாம் கண்களை மூடிக்கொண்டு, நன்றாக மூச்சிழுத்து மெதுவாக உச்சரிக்க வேண்டும்.
  • கண்களை மூடிக்கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிக்கும்போது, மனதில் கர்ப்பிணிகளை நினைத்து கொள்ளவும்
  • பின் மகிழ்ச்சியான சுகப்பிரசவத்தை மனதில் நினைத்துக்கொள்ளவும்.
  • மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே, குழந்தை ஆரோக்கியத்துடன் பிறப்பதாக நினைக்கவும்
  • உடலுக்கு நல்ல ஓய்வு கிடைப்பதை நீங்கள் உணர்வீர்கள்

 

காயத்ரி மந்திரமும் அதன் பலன்களும்

 

“ஓம் பூர் புவஸ்ஸூவ

தத் சவிதுர்வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ யோ ந: ப்ரசோதயாத்”

இந்த மந்திரத்தை கர்ப்பிணிகள் உச்சரித்தால் தைரியமும், அறிவொளியும் பிறக்கும்

 

குண்டலினி யோகா மந்திரமும் அதன் பலன்களும்

 

  • கியான் முத்திரையைக் காட்டியபடியே ‘ஸ த ந ம’ என்று 5 நிமிடங்களுக்கு சத்தமாக உச்சரிக்கவும், பின் 5 நிமிடங்களுக்கு மெதுவாக உச்சரிக்கவும், பின் 11 நிமிடங்களுக்கு மனதிற்குள் உச்சரிக்கவும், பின் 5 நிமிடங்களுக்கு மெதுவாக உச்சரிக்கவும், பின் 5 நிமிடங்களுக்கு சத்தமாக உச்சரிக்கவும்.
  • பலன்கள்: மனத்தூய்மை, மனநிம்மதி மற்றும் மனஅழுத்தம் ஏற்படாது.

 

ஹிந்து மரபின்படி, அதிகளவில் சுகபிரசவதிற்கான மந்திரங்கள் உள்ளன. எந்த மந்திரங்களையும் உச்சரிக்கலாம். ஆனால், மேலே குறிப்பிட்டுள்ள இருக்கை முறையும், யோகா முத்திரையும், உச்சரிப்பு முறையையும் கடைப்பிடிப்பது மிகமிக நல்லது. அப்போதுதான் மனம் அலைப்பாயாது. பலவித மன குழப்பங்களிலிருந்தும் தெளிவு பிறக்கும். நிம்மதி ஏற்படும்.

 

உங்களுக்கும் இதைப் போன்ற வேறு ஏதேனும் கர்ப்பக்கால  மந்திரங்கள் தெரிந்திருந்தால், அவற்றின் பலன்களுடன் மறக்காமல் ஷேர் செய்யவும்.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.