22 Nov 2019 | 1 min Read
Komal
Author | 138 Articles
பொதுவாக குழந்தைகள் ஒரு வயதுக்குப் பிறகு அடம்பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். எடை அதிகரிப்பு அனைத்து குழந்தைகளுக்கும் அவர்களின் முதல் பிறந்தநாளுக்குப் பிறகு மெதுவாகச் செல்லும். இது அவர்களின் பசியை நேரடியாக பாதிக்கிறது. எனவே, பெரும்பாலான குழந்தைகள் சில உணவுகளை நிறைய சாப்பிடுகிறார்கள், மற்றவற்றை வேண்டாமென ஒதுக்குகிறார்கள். வற்புறுத்தி ஊட்டினாலும் வேண்டாம் என்று பிடிவாதத்தை தொடங்குகிறார்கள். இது மிகவும் பொதுவான அனைத்து பிள்ளைகளிடமும் உள்ள பழக்கமே.
அவர்களின் பிடிவாதத்திற்கு சரணடைய ஆரம்பித்துவிட்டால் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவு உட்கொள்ளும் பழக்கம் போய்விடும். மேலும் நொறுக்கு தீனியில் நாட்டம் செலுத்தவும் வாய்ப்பிருக்கிறது. பின்வரும் குறிப்புகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அவர்களின் பிடிவாத குணத்தை கட்டுக்குள் கொண்டு வரலாம்.
பிள்ளைகளுக்கு எப்பொழுதும் ஒரே வகை உணவு முறைகளை பின்பற்றாமல், அடிக்கடி வித்தியாசமாக சமைத்து கொடுக்கலாம். விரல் உணவுகள் (finger foods) – பாப்கார்ன், பொரிவகைகள், பொறித்த உணவுகள், அசைவ உணவுகள், பழத்துண்டுகள், வித்தியாசமான வடிவ இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவை. குடும்ப உணவுகளை 1 வயதிலிருந்து கட்டாயம் பழக்கப்படுத்த தொடங்க வேண்டும்.
மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.
A
Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.