• Home  /  
  • Learn  /  
  • கொரோனா வைரஸ் – அரசு அறிவுறுத்துவது என்ன?
கொரோனா வைரஸ் – அரசு அறிவுறுத்துவது என்ன?

கொரோனா வைரஸ் – அரசு அறிவுறுத்துவது என்ன?

20 Mar 2020 | 1 min Read

Komal

Author | 138 Articles

`Covid -19 கொரோனா வைரஸ் தொற்று ஓர் உலகளாவிய பெருந்தொற்று’ என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்திருப்பதையடுத்து உலக நாடுகள் எல்லாம் நோய் பரவாமல் தடுக்க அவசரகால நடவடிக்கைகளை முன்னெடுத்தி ருக்கிறது. இந்த நெருக்கடி நிலையை ஒவ்வொரு நாடும் ஒவ்வொருவிதமாகக் கையாளுகின்றன. 

நமது மத்திய/மாநில அரசுகள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவுறுத்தி உள்ளது. பொதுமக்கள் யாரும் கூட்டம் கூடும் இடங்களான ஷாப்பிங் மால் (shopping mall), விழாக்கள், கொண்டாட்டங்கள், திரை அரங்குகள் போன்றவற்றில் கூடுவதை தவிர்க்கவும், முடிந்த அளவு வீட்டிலேயே இருக்கவும் அறிவுறுத்துகிறது.    

சமூக இடைவெளியின் அவசியம்

ஆதாரம் : bisnis

சமூக இடைவெளி என்பது ஒருவருடன் நெருங்கிய தொடர்பு, தொடுதல், அணைத்தல், ஒருவர் பின் மற்றொருவர் ஒட்டி நிற்றல், பொது வாகனத்தில் பயணம், கூட்ட நெரிசல் போன்றவை. ஒருவருக்கும் மற்றொருவருக்குமான இடைவெளி குறைந்தது 6 மீட்டர் இருக்க வேண்டுமென வலியுறுத்துகிறது.       

இதன் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதை தடுக்கவே இந்த முன்னெச்சரிக்கை.  

வெளிநாடுகள் செல்ல/வர தடை

ஆதாரம் : cnbcfm

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரவும், இங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் அரசின் மருத்துவ கண்காணிப்பில் 14 நாட்கள் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.       

வீட்டிலிருந்தபடியே அலுவலக பணி 

பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தனது ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது. பயணநேரம், அலுவலக சூழ்நிலை மூலம் நோய்த்தொற்று பரவாமல் தடுக்கவே இந்த நடைமுறையை கடைபிடிக்க அரசு கட்டளையிட்டுள்ளது. 

கைகளில் கொரோனா முத்திரை

ஆதாரம் : static.langimg

ஒரு சிலரை வீடுகளில் தனிமைப்படுத்தி இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். மேலும் அவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும், மற்றவர்கள் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளும்படியும் கையில் மையினால் முத்திரை குத்தும் முறையை மகாராஷ்டிரா மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது.  

பாரத பிரதமர் உரை

கொரோனா வைரஸ் குறித்து நம்மிடையே நிலவும் அச்சத்தை தவிர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்த பாரத பிரதமர் மக்களிடையே உரையாற்றினர். அதன் விவரம் வருமாறு:

  • இந்தியாவில் இருக்கும் 130 கோடி மக்களும் கொரோனாவுக்கு எதிரான போரை முன்னெடுக்க வேண்டும். அடுத்த சில வாரங்களுக்கு அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் சமூக இடைவெளி பேணுவது மிகவும் அவசியம். 
  • மார்ச் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து வேறு எதற்காகவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். இது பொதுமக்கள் தங்களுக்குத் தாங்களே விதித்துக் கொள்ளும் ‘மக்கள் ஊரடங்கு’ ஆகும். உலகத்திற்கு நமது வலிமையை காண்பிப்பதற்கு இது அவசியம். 
  • மார்ச் 22ம் தேதி மாலை 5 மணிக்கு உங்கள் வீட்டு பால்கனி, அல்லது ஜன்னலோரம் அல்லது கதவு ஓரம் நின்று கொண்டு ஐந்து நிமிடங்களுக்கு மணி ஓசை எழுப்புவது, கை தட்டுவது, சைரன் ஒலிப்பது போன்றவற்றை செய்யலாம். இது நமக்காக பாடுபட்டு வரும் மருத்துவ ஊழியர்களுக்கு செய்யக்கூடிய கவுரவம்
  • 60 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா நோய் தாக்கம் நமது நாட்டை விட்டு அகலும் வரை, வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். 
  • அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்துக்கு எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. எனவே மொத்தமாக பொருட்களை வீட்டில் வாங்கி குவித்து செயற்கை பற்றாக்குறைக்கு வழிவகுத்து விடாதீர்கள். 
  • கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக பொருளாதாரத்தின் மீது தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்வதற்கு நிதியமைச்சர் தலைமையில் பொருளாதார பணிக்குழு அமைக்கப்படுகிறது. 
  • வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருங்கள், அத்தியாவசிய தேவை இல்லாவிட்டால், வீட்டை விட்டு வெளியே வரவே வேண்டாம். 
  • வழக்கமான செக்-அப்புகளுக்காக மருத்துவமனைகளுக்கு இப்போது செல்ல வேண்டாம். தேவையின்றி அச்சப்பட்டு மருத்துவமனைகளில் குவியாதீர்கள். அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், அதைத் தயவு செய்து, தள்ளிப்போடலாம். 
  • வைரஸ் பாதிப்பு காரணமாக வணிகம் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஊழியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, ஊதியத்தில் பிடித்தம் செய்வது உள்ளிட்டவற்றில் எந்த ஒரு தொழில் நிறுவனமும் ஈடுபடாமல், அவர்கள் மீது மனிதாபிமானம் காட்டவேண்டும்.  

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பாரத பிரதமர்  உரையாற்றியது மக்களிடம் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், பயத்தையும் குறைத்துள்ளது எனலாம். 

அடிப்படை முன்னெச்சரிக்கைகள்

தனிமனித சுகாதாரம் என்பது இச்சமயத்தில் கட்டாயமாக கடைபிடிக்கப்பட வேண்டும். கைகளை அடிக்கடி கழுவுதல், ஆல்கஹால் அடிப்படையிலான ஹாண்ட் சானிடைசர்களை பயன்படுத்துதல், வீடுகளை கிருமி நாசினி சோப்புகளை கொண்டு சுத்தப்படுத்துதல், தும்மும்போதும், இருமும்போதும் கைக்குட்டை அல்லது முழங்கையை மறைத்து மற்றவர்களின் மீது நீர்த்துளிகள் தெறிக்காத வகையில் சுகாதாரத்தை கடைபிடித்தல். வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்லுதல் போன்றவை.       

பேனர் படம் : vikatan

#careandhygiene #momhealth #childhealth #familyhealth

A

gallery
send-btn

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.