• Home  /  
  • Learn  /  
  • பிறந்த பிள்ளையை கவனித்துக்கொள்ள சூப்பர் டிப்ஸ்
பிறந்த பிள்ளையை கவனித்துக்கொள்ள சூப்பர் டிப்ஸ்

பிறந்த பிள்ளையை கவனித்துக்கொள்ள சூப்பர் டிப்ஸ்

11 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

முதன் முதலில் பிள்ளையை பெற்ற அம்மாக்கள், தன் பிள்ளையை எப்படி எல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்த கேள்வியை மனதில் கொண்டிருப்பர். இதனை பற்றி விளக்குகிறது இந்த பயனுள்ள பதிவு.

 

பிறந்த பிள்ளையை எப்படி நாம் கவனித்துக்கொள்வது?

இது முதன் முதலில் பிள்ளை பெற்ற அம்மாக்களுக்கு சற்று சவாலாகவே இருக்கிறது.

1. பாலூட்டுதல்:

நேரத்துக்கு நம் பிள்ளைகளுக்கு பால் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒரு விஷயமாகும். ஒவ்வொரு 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை நாம் பிறந்த பிள்ளைகளுக்கு பால் கொடுக்க வேண்டும். அப்படி என்றால், 24 மணி நேரத்தில் நாம், நம்முடைய பிள்ளைக்கு 8-12 தடவை பால் கொடுப்போம். பிறந்த பிள்ளைகளுக்கு முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதே சிறந்தது. தாய்ப்பாலில் தேவையான ஊட்டச்சத்துக்களும், எதிர்ப்பு சக்தியும் இருப்பதால் நம்முடைய பிள்ளையின் ஆரோக்கியத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது. குறைந்தது 10 நிமிடங்களாவது நாம் தாய்ப்பால் தர வேண்டும். மார்பகத்தை அவர்கள் வாய்க்கு அருகாமையில் வைத்துக்கொண்டு தாய்ப்பால் தருவது சிறந்த பொஷிஷன் ஆகும். அவர்கள் சரியாக தாய்ப்பால் குடிக்கும்போது தான், அம்மாக்கள் முலைக்காம்பில் வலியை உணர மாட்டார்கள். மார்பகம் லேசாக இருப்பது, அவர்கள் சரியான அளவிற்கு தாய்ப்பால் குடித்து முடித்துள்ளதை உணர்த்துகிறது. தாய்ப்பால் சுரக்காத அம்மாக்கள், டாக்டர் பரிந்துரை பெற்று பார்முலா பாலை கொடுக்கலாம்.

 

2. ஏப்பம் விடுதல்:

அவர்கள் பால் குடித்து முடித்ததும், ஏப்பம் விட வேண்டும். ஏனென்றால், பால் குடிக்கும்போது அவர்கள் சில சமயம் காற்றையும் விழுங்க வாய்ப்புண்டு. இதனால் கோலிக் பிரச்சனையும் வரக்கூடும். ஏப்பம் விடுவதால், விழுங்கிய காற்று ஜீரணித்து, கோலிக் பிரச்சனை வராமலும் பார்த்துக்கொள்ளும். ஒரு கையால், உங்கள் மார்பருகே பிள்ளையை பிடித்துக்கொள்ளவும். அவர்களது கன்னப்பகுதி, உங்கள் தோள்பட்டை மீது இருக்குமாறு பிடித்துக்கொள்ளவும். மெல்ல மற்றொரு கையை கொண்டு அவர்கள் முதுகில் தடவி விட வேண்டும். இதனால் ஏப்பம் விட எளிதாக இருக்கும்.

 

3. பிள்ளையை எப்படி தூக்குவது?

அவர்களை தூக்கும்போது, உங்களின் ஒரு கை கொண்டு பிள்ளைகளின் தலை மற்றும் கழுத்து தாங்களாக பிடித்துக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யவும். ஏனென்றால், அவர்களின் கழுத்து தசைகள் வலுவாக இப்போது இருக்காது. அதனால் தலையை அவர்களால் தூக்கவும் முடியாது. முதுகெலும்பும் இப்போது தான் வலுவாகி கொண்டு இருக்கும். 3 மாதங்களுக்கு பிறகு தான் கழுத்து வலுப்பெற்று, அவர்களால் தலை தூக்கி பார்க்க முடியும். அதனால் பிறந்த பிள்ளைகளின் தலை மற்றும் கழுத்தை சப்போர்ட்டாக பிடித்துக்கொள்வது எப்போதுமே நல்லது.

 

4. தொப்புள் கொடி பராமரிப்பு:

பிறந்த முதல் மாதத்தில் தொப்புள் கொடியை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். புதிதாக பிறந்த பிள்ளைகளை வெதுவெதுப்பான நீரில் 2-6 மணி நேரம் கழித்து குளிப்பாட்டவும். அவர்களின் தொப்புள் பகுதியை சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்துக்கொள்ளவும். பிள்ளைகளின் டயாப்பரை கீழாக மடக்கி விடவும். அப்போது தான் தொப்புள் கொடி காயும். அசுத்தமான கைகளுடன் அவர்கள் தொப்புள் பகுதியை நாம் தொடக்கூடாது. ஈரமான துணி கொண்டு சுத்தம் செய்து, சுத்தமான துணியைக்கொண்டு துடைத்து காயவிடவும். ஒருவேளை தொப்புள் பகுதியில் சிவந்து இருத்தல், வீக்கமாக இருத்தல், சீல் வைத்தது போல காணப்படுதல், இரத்தம் வருதல் போன்ற பிரச்சனை இருந்தால் டாக்டரை பார்க்கவும்.

 

5. டயாப்பர் அணிவித்தல்:

அடிக்கடி டயாப்பர் மாற்றுவது, பிறந்த பிள்ளைகளுக்கு செய்யப்படும் முக்கியமான வேலைகளில் ஒன்றாகும். அவர்களுக்கு போதுமான தாய்ப்பால் அல்லது பார்முலா பால் கிடைத்தால், ஒரு நாளைக்கு 6 முதல் 8 டயாப்பர்களை நனைப்பார்கள். எப்போதெல்லாம் தேவையோ, அப்போதெல்லாம் அவர்களின் டயாப்பரை நான் கண்டிப்பாக மாற்ற வேண்டும். நீங்கள் குறைந்தது 10 தடவையாவது டயாப்பரை மாற்றுவது நல்லது. அழுக்கான டயாப்பரை மாற்றும்போது, மாற்றுவதற்கான ஷீட்கள், டயாப்பர் வைப்ஸ், டயாப்பர் ராஷஷ் கிரீம், பேபி பவுடர் போன்றவை பயன்படுத்தலாம். சிறுநீர் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க, உங்களுடைய பெண் பிள்ளைகளின் அந்தரங்க உறுப்பை முன்னிருந்து பின் சுத்தமாக துடைக்கவும். அதேபோல தினமும், சில மணி நேரம் டயாப்பர் போடாமல் பிள்ளைகளை காற்றோட்டமாக விடவும்.

 

6. தூங்க வைத்தல்:

முதல் 2 மாதங்களுக்கு, ஒரு நாளைக்கு 16 மணி நேரம் நம்முடைய பிள்ளைகள் தூங்க வேண்டும். அவர்கள் இப்போது 2 முதல் 4 மணி நேரங்கள் குட்டி தூக்கம் போட்டு எழுவார்கள் என்பதால் பசியாகவும் அவர்கள் வயிறு காய்ந்து போயும் இருக்கும். ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு ஒரு தடவை நாம் அவர்களுக்கு கட்டாயம் பால் தர வேண்டும். பிறந்த பிள்ளைகள் எல்லா நாளும் ஒரே வழக்கத்தில் தூங்குவார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு பிள்ளைகளும் தூக்க சுழற்சியில் வேறுபட்டே காணப்படுவார்கள். பிறந்த பிள்ளைகளின் தலை பொஷிஷனை தூங்கும்போது மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். இது பிள்ளைகளின் தலை சரியான வடிவத்தை பெற உதவும். அதேபோல, அவர்கள் குப்புற படுத்து (முகம் கீழ் நோக்கி இருத்தல்) தூங்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும். இல்லையேல், மூச்சு திணறல் வர வாய்ப்புண்டு. பிள்ளைகள் தூங்கும்போதே, அம்மாக்களும் குட்டி தூக்கம் போட்டுக்கொள்ள வேண்டும்.

பெற்றோர்களே, பிறந்த பிள்ளைகளை எப்படி எல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என்ற சந்தேகத்திற்கான பதில் தற்போது உங்களுக்கு கிடைத்திருக்குமென நாங்கள் நம்புகிறோம். உங்கள் பிள்ளைகள் தற்போது எவ்வளவு நேரம் தூங்குகிறார்கள்? அவர்களின் பெயர் என்ன? பிறந்து எவ்வளவு மாதங்கள் ஆகிறது? நீங்களும் மற்ற அம்மாக்களுடன் இதனை பகிர்ந்துக்கொள்ளலாமே.

#babycare

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.