• Home  /  
  • Learn  /  
  • தாய்ப்பால் தரும்போது சொல்லப்படும் 10 கட்டுக்கதைகள்
தாய்ப்பால் தரும்போது சொல்லப்படும் 10 கட்டுக்கதைகள்

தாய்ப்பால் தரும்போது சொல்லப்படும் 10 கட்டுக்கதைகள்

4 Jan 2022 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

உண்மை என்ற ஒன்று இருக்கும்போது, அதற்கு எதிர்மறையான விஷயங்களும் இருக்கும். ஒரு சில கட்டுக்கதைகள் வேடிக்கையாக கடந்து செல்ல கூடியதாக இருந்தாலும், ஒரு சில கட்டுக்கதைகள் மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தும். தாய்ப்பால் தருவதில் இவை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது? என்னவெல்லாம் கட்டுக்கதைகள் அவிழ்த்து விடப்படுகின்றன என்பதை தான் நாம் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.

 

1. தாய்ப்பால் தருவது எளிது

பிள்ளைகள் எப்போதுமே பால் வாடையை பிடித்து, தாயின் மார்பகம் அருகில் செல்லக்கூடிய இயல்பை கொண்டவர்கள். பல அம்மாக்களுக்கு, தாய்ப்பால் தர உகந்த நிலை எதுவென்பதை கண்டுபிடிப்பதில் கடினம் ஏற்படுகிறது. தாய்ப்பால் தருவது, எடுத்த உடனே தாய் மற்றும் பிள்ளைக்கு எளிதாக இருந்துவிடுவதில்லை.

 

2. மார்பகம் காயம் அடைந்தே தீரும்

முதன்முதலில் தாய்ப்பால் குடிக்க அவர்கள் பழகும்போது, மார்பக காம்பை சேர்த்து கடிப்பதால், காயம் ஏற்படக்கூடும். ஆனால், சரியான நிலையில் அவர்களை பிடித்திருக்கும்போது இந்த பிரச்சனை இருப்பதுமில்லை.

 

3. தாய்ப்பால் தரும்முன்பு மார்பக காம்பை சுத்தம் செய்ய வேண்டும்

இது தேவையற்ற ஒரு விஷயமே. பிள்ளைகளுக்கு எப்போதும் தாய்மையின் வாசனையை உணர்வது கடினமான ஒன்றல்ல. பிள்ளைகள் பிடிக்கும் வாசனையை மார்பக காம்பு உருவாக்க, நல்ல பாக்டீரியாக்கள் எதிர்ப்பு சக்தியை தரவும் உதவுகிறது.

 

4. பிறந்த உடன் தாயையும், சேயையும் பிரித்து வைக்க வேண்டும்

மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவருமே கங்காரு கேர் என்பதை பரிந்துரை செய்கின்றனர். இதனில், அம்மாவின் தோலும், பிள்ளையின் தோலும் ஒட்டி பாச மழை பொழிந்தபடி இருக்கும். இதுவே, அவர்கள் சிரமமின்றி தாய்ப்பால் தரவும் உதவும்.

 

5. தாய்ப்பால் தரும்போது, பிளைன் உணவை மட்டுமே உண்ண வேண்டும்

தாய்ப்பால் தரும் அம்மாக்கள் எப்போதுமே சரியான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் உணவு பழக்கவழக்கத்தில் எந்தவொரு மாற்றத்தையும் செய்ய வேண்டிய அவசியமில்லை. பிள்ளைகள் கருவில் இருக்கும்போதே அம்மாக்கள் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு தங்களை தயார்செய்து கொள்கின்றனர் என்பதே மறுக்க முடியாத உண்மை.

 

6. உடற்பயிற்சி செய்வதால் தாய்ப்பால் சுவை மாறும்

தாய்ப்பால் தரும்போது உடற்பயிற்சி செய்வதென்பது ஆரோக்கியத்துக்கு அவசியமானது. அதனால் சுவை மாறும் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.

 

7. தாய்ப்பால் தருவதால், ஃபார்முலா பாலை பயன்படுத்தவே முடியாது

எப்போது தாய்ப்பால் தருவது? எப்போது ஃபார்முலா பால் தருவதென்பதை மருத்துவர்கள் பரிந்துரையுடன் அம்மாக்களே முடிவு செய்வார்கள். தாய்ப்பால் சுரப்பு நின்றுவிடாதபடி நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் அவ்வளவு தான்.

 

8. தாய்மார்கள் பலர் போதிய பால் சுரப்பை கொண்டிருக்கவில்லை

எல்லா அம்மாக்களுக்கும் தாய்ப்பால் சுரப்பென்பது இயல்பாகவே போதிய அளவில் தான் காணப்படும். நாம் நடந்துக்கொள்ளும் விதம், கடைப்பிடிக்கும் உணவு பழக்கவழக்கம் போன்றவற்றால் தான் அவை குறைந்து காணப்படுகிறது. சிலர் தாய்ப்பால் கொடுப்பதில் அலட்சியம் காட்டும்போது, தாய்ப்பால் வரத்து குறையக்கூடும்.

 

9. தாய்ப்பால் தரும்போது மருந்துகள் எடுத்துக்கொள்ள கூடாது

இதுவும் கட்டுக்கதை தான். தாய்ப்பால் தரும் அம்மாக்கள் மருத்துவர் பரிந்துரையின்றி தானாக எந்தவொரு மருந்து மாத்திரையும் எடுத்துக்கொள்ளக்கூடாது அவ்வளவு தான்.

 

10. ஒரு வருடத்திற்கும் மேலாக தாய்ப்பால் கொடுத்தால் பழக்கத்தை மாற்றுவது கடினம்

இதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. இரண்டு வருடம் வரைக்கும் தாய்ப்பால் தரும்போது, இதனால் தாய் மற்றும் பிள்ளை இருவருக்கும் பலன்கள் கிடைக்கிறது என்பதே உண்மை. எவ்வளவு நாள் தாய்ப்பால் கொடுக்க வேண்டுமென்பதை, நம்முடைய மருத்துவர் தான் முடிவு செய்கிறார்.

அம்மாக்களே, நீங்கள் தாய்ப்பால் தரும்போது உங்களிடம் கூறப்பட்ட கட்டுக்கதைகள் என்ன? தாய்ப்பால் தரும் அம்மாக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் டிப்ஸ் என்ன?

கமெண்டில் பதிவு செய்யலாமே!

#breastfeeding #lactation

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.