தேவையானவை:
*கடலைப்பருப்பு 1½ டேபிள்ஸ்பூன் *உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
*அரிசி மாவு 350 கிராம்
*உளுந்து மாவு 2 டேபிள்ஸ்பூன் *பொட்டுக்கடலை மாவு 2 டேபிள்ஸ்பூன்
*எள் 1 டேபிள்ஸ்பூன்
*உப்பு தேவையான அளவு *மிளகாய்த்தூள் 1½ டீஸ்பூன்
*பெருங்காயம் ¼ டீஸ்பூன் *கறிவேப்பிலை ஒரு கொத்து
*நெய் அல்லது பட்டர் 2 டேபிள்ஸ்பூன்
*எண்ணெய் பொரிப்பதற்கு
செய்முறை:
கடலைப் பருப்பையும் உளுந்தையும் தனித்தனியே ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஒரு பவுலில் அரிசி மாவு, உளுந்து மாவு, எள், மிளகாய்த்தூள், உப்பு, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, பெருங்காயம், ஊறவைத்த கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை திரட்டி வட்ட வடிவத்தில் வெட்டி போர்க் அல்லது கத்தி வைத்து சிறு சிறு துளை போடவும், அதனை எண்ணையில் பொரித்து எடுத்தால் சுவையான தட்டை தயார்.
படம்: கூகுள்
#tamilinfographics #babynutrition
Recommended Articles
BabyChakra User
Super yummy