குழந்தைகளின் அடத்தை எதிர்கொள்ள 7 வழிகள்

குழந்தைகளின் அடத்தை எதிர்கொள்ள 7 வழிகள்

18 Mar 2019 | 1 min Read

Shree Venkatesh

Author | 13 Articles

குழந்தை பொது இடத்தில் சண்டித்தனம் செய்வது மிக அசாதாரணமானது பார்வை அல்ல. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு நான் அம்மாவாக இல்லாதபோது சண்டித்தனம் செய்யும் குழந்தைகளின் பெற்றோரை பார்த்து பரிதாபப்படும் பார்வையாளர்களில் ஒருவராக இருந்தேன். ஒரு சில வருடங்கள் கழித்து அம்மாவான பின்பு நான் பொது இடத்தில் சண்டித்தனம் செய்யும் இரட்டையர்களின் பெற்றோராக இருப்பதை அறிந்தேன். நான் ஒரு பிரபலமாக இருக்க விரும்புகிறேன், பொதுமக்களின் கவனத்தை அடைவதில் பெருமைப்படுகிறேன். ஆனால் உண்மையில், நான் விரும்பிய பொது மக்களின் கவனம் இது அல்ல. என் இரட்டையர்கள் சுமார் 3.5 வயது முதல் 4 வயது இருந்த போது நான் அடிக்கடி இந்த மோசமான நிலைமையில் இருந்திருக்கிறேன். இப்போது அவர்களுக்கு 6 வயது, இந்த இக்கட்டான சூழ்நிலையின் அளவு கணிசமாக குறைந்துவிட்டது. ஏனெனில் இந்த வயதில் அவர்களிடம் நியாயப்படுத்த முடியும்.

 

இது வேடிக்கையானது ஆனால் என் கே.கே இரட்டையர்கள் குழந்தைகளாக இருந்த போது வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பே அவர்கள் ஒரு ஒப்பந்தம் வைத்திருப்பது போல் ஒற்றுமையாக  சண்டித்தனம் செய்வார்கள். வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னால் ஆட்சி புத்தகத்தை ஒரு நூறு முறை பார்த்தேன் என்றாலும் எப்படியோ இருவரும் ஒரே நேரத்தில் ஒரு காட்சியை உருவாக்கிவிடுவார்கள். இருவரும் வீட்டிற்கு செல்லும் முன் அவர்கள் சிறப்பாக நடப்பதாக என்று எனக்கு உறுதியளிப்பார்கள், ஆனால் எப்படியாவது நாங்கள் கடைக்கு அல்லது எந்த பொது இடத்தை அடைந்ததும் அவர்களுக்கு குறுகிய கால நினைவு இழப்பு பிரச்சனை இருப்பது போல் உணர்வேன் (கஜினி படத்தில் வருவது போல்) இரட்டை சப்டித்தன நிகழ்வு விரைவில் தொடங்கும் என்பதால்!!

இத்தகைய இக்கட்டான சூழல்களைக் கையாள நிச்சயம் வழிகள் உள்ளன:

 

  1. இடைப்பட்ட சிற்றுண்டி அல்லது விருந்தளிப்பு பழச்சாறு அல்லது நீருடன் சேர்ந்து குறிப்பாக மளிகை கடைகளில் எப்பொழுதும் விபத்துகளை குறைக்க ஒரு எளிய வழியாகும். இது குழந்தைகளை பிஸியாக வைத்து, தொடங்கும் முன்பே நிலைமையை கட்டுப்படுத்துகிறது.
  2. குழந்தை அழும்போது பெற்றோர் கோபத்தை தூண்டாமல் இருப்பது முக்கியம். நான் நகைச்சுவைக்காக இதை சொல்லவில்லை !! இது நடக்கும். சில நேரங்களில் நாம் பெற்றோர்கள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம், அதனால் நாம் அவர்களது கோபத்தை நம்மோடு ஒப்பிடுவோம். நமது நல்லறிவை பராமரித்து நிலைமையை கட்டுப்படுத்துவது முக்கியம்.
  3. ஒரு கதகதப்பான கட்டித் தழுவுதல் சில நேரங்களில் உதவும் ஆனால் எப்போதும் இல்லை. சரியான முயற்சியை செய்வதில் என்ன தீங்கு நிகழும்?
  4. விபத்தின் தூண்டுதல் புள்ளியில் இருந்து குழந்தையை அகற்றுவது பொதுவாக உதவும். அவர்களைத் திசைதிருப்புவது சூழ்நிலையை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் நிச்சயமாக உதவுகிறது.
  5. அடிப்பது அல்லது அழும் குழந்தையிடும் கத்துவது நிலைமையை மோசமாக்கும். அந்த நேரத்தில் மன அமைதியை இழந்துவிடாமல் தவிர்ப்பது நல்லது. குழந்தையிடம் மென்மையான குரலில் பேசுவது அறிவுறுத்தப்படுகிறது மற்றும் குழந்தைக்கு நம் அன்பை வலியுறுத்தலாம்.
  6. குழந்தைக்கு அவர் என்ன செய்தார் என்பதை அறிவுறுத்து மிகவும் முக்கியம், அத்தகைய நடத்தையை ஏற்றுக்கொள்ள முடியாது. குழந்தை அமைதியான மனநிலையில் இருக்கும் போது பேச வேண்டும் அதனால் அவர்களின் கோபமான நடத்தை பாராட்டப்படாது என்பதை அவர்களுக்கு அறிவுருத்த வேண்டும்.
  7. குழந்தைகளை பொது நிகழ்ச்சிக்கு அழைத்து செல்வது அல்லது குழந்தை பசியுடன் இருக்கும்போது நிறைய விருந்தினர்களை அழைத்து வருவது அல்லது தூக்கம் இல்லாதிருப்பது, உங்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கலாம். குழந்தையின் வயிறு நிறைந்துவிட்டது, குழந்தையை நன்கு ஓய்வெடுத்தது என்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியம்.

 

நான் ஒரு 4 வயது குழந்தை மற்றும் ஒரு 2 வயது குழந்தை இடையே சிரமப்படும் ஒரு அம்மாவை பார்த்தேன். அதில் 4 வயதான குழந்தை பல்பொருள் அங்காடியில் சண்டிதனம் செய்துக் கொண்டிருந்தது, இது எனக்கு 2.5 ஆண்டுக்கு முன் என் இரட்டையர்களின் சிறுபிள்ளைத்தனமான சண்டித்தனத்தை நினைவிற்கு மீண்டும் கொண்டு வந்தது. அவர்கள் 7 வயதை அடைய போவதால் இப்போது அனைத்தும் எளிதாகிவிட்டது. வீட்டில் அல்லது ஒரு பொது இடத்தில் நடக்கும் எந்தவிதமான சண்டித்தனமும் இரட்டையர்களிடம் வெளிப்படையாக பேசுவதன் மூலம் தீர்க்கப்படலாம். சண்டித்தனத்தின் நன்மை தீமைகளை எடுத்துக் கூறுவது விளைவுகளை புரிந்துகொள்ள உதவுகிறது மற்றும் அதர்கு ஒரு முற்றுப்புள்ளியை வைக்க உதவுகிறது.

 

அத்தகைய விரும்பத்தகாத சூழ்நிலைகளைத் தீர்க்க பொறுமைதான்  முக்கியம் அதுதான் குழந்தை வலர்ப்புக்கான வாழ்த்துக்கள்!!

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.