• Home  /  
  • Learn  /  
  • கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்கள் ஏன் மிக முக்கியமானவை?
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்கள் ஏன் மிக முக்கியமானவை?

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்கள் ஏன் மிக முக்கியமானவை?

22 Mar 2019 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்கள் ஏன் மிக முக்கியமானவை?

 

நீங்கள் புதிதாக கர்ப்பமாக இருந்தால், முதல் டிரைமிஸ்டர் உங்கள் குழந்தைக்கு மிகவும் முக்கியமானது, மிகவும் முக்கியமானது ஆமாம் அப்படித்தான். ஏன் என்றால் இங்கே படிக்கவும், மேலும் முதல் மூன்று மாத கர்ப்பத்தில் செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

 

இந்த முதல் மூன்று மாதங்கள், வளர்ச்சிக் கட்டத்தில், உங்கள் குழந்தை மிக விரைவான வளர்ச்சியை பெறும் காலமாகும். வளர்ச்சி மிகவும் வியக்கத்தக்கதாக உள்ளது. இந்த குறுகிய காலத்தில், குழந்தை ஒரு கருவுற்ற செல்லில் இருந்து வளரும், மேலும் உறுப்புகள் மற்றும் உடல் அமைப்புகள் வளரும். இந்த நேரத்தில் நிறைய விஷயங்கள் நடக்கின்றன [இணைப்பு 14] – அனைத்து முக்கிய உறுப்புகளும் உருவாகின்றன, மேலும் மூளை வளர்ச்சியைத் தொடங்குகிறது. முதல் டிரைமிஸ்டர் முடிவின் போதும், குழந்தை சிறிய ஆப்பிளின் அளவு மட்டுமே உள்ளது, அது அனைத்து அடிப்படையான மரபியல், முக்கிய உறுப்புகள் மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது  இதய துடிப்பு, மூட்டுகள், விரல்கள் மற்றும் கால்விரல்கள், மேலும் முடி கூட கொண்டுள்ளது!

 

முதல் மாதத்தில், முக்கிய உறுப்புகள் உருவாக ஆரம்பிக்கின்றன. மூளை மற்றும் முள்ளந்தண்டு வடமாக உருமாறும் நரம்பு குழாய் உருவாகிறது. இரத்த செல்கள் வளரத் தொடங்கும். செரிமான அமைப்பு, இதயம் மற்றும் இரத்த ஓட்ட அமைப்பு உருவாகின்றன. கண்களும் காதுகளும் கூட வளரத் தொடங்கும். இரண்டாவது மாதத்தில், நரம்பு, சிறுநீரக, செரிமான மற்றும் சுற்றோட்ட அமைப்புகள் தொடர்ந்து உருவாக்கப்படுகின்றன. கரு ஒரு மனித உருவத்தை பெறத்  தொடங்குகிறது, ஆனால் அது இன்னும் முழுமையாக குழந்தை போல் தோன்றவில்லை. குழந்தையின் இதயத்துடிப்பை தெளிவாக கேட்க முடியும் மற்றும் குழந்தை நகரக் கூட தொடங்குகிறது. ஆனால் தாய் இன்னும் அதை உணர முடியாது. மூன்றாவது மாதத்தில், வெளிப்புற பிறப்புறுப்பு உறுப்புகள் உருவாகின்றன, ஆனால் அவை அல்ட்ராசவுண்ட் மூலம் இன்னும் தெளிவாக வேறுபடுத்தி காண முடியாது. விரல் நகங்கள், கால் விரல் நகங்கள் மற்றும் கண் இமைகள் வளர்ச்சியடையும்.

 

இந்த விரைவான மாற்றங்கள் உங்கள் உடலில் வளர்ந்து வரும் கருவுக்கு ஒரு பாதுகாப்பான, ஊட்டமளிக்கும் சூழலை வழங்க வேண்டும் என்பதாகும். ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் இரசாயனங்கள் வெளிப்பாடு, ஆகியவற்றால் கருச்சிதைவு ஏற்படக்கூடும், அல்லது குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சி குன்றி இருக்கலாம். எனவே, கருவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்காக, உங்கள் உடல் நலத்தை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

ஆரோக்கியமான உணவு முறையைப் பராமரிக்கவும்.

 

  • ஆரோக்கியமான, வீட்டில் தயாரித்த உணவை சாப்பிடுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும், வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும், ஏனென்றால் உணவகங்களில் உணவில் என்னென்ன வண்ணங்கள் மற்றும் கூட்டுப்பொருட்கள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியாது.

 

  • வைட்டமின்கள் மற்றும் ஃபோலிக் அமிலம் மருந்துகள், ஃபோலேட்ஸ் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ள உணவுகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

 

  • சில பெண்களுக்கு, அவர்கள் சாப்பிட்ட உணவை மீண்டும் உண்பது எளிதல்ல. எனவே நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். அதிக உணவு சாத்தியம் இல்லை என்றால், பகல் நேரத்தில் சிறிய அளவு உணவுகளை நிறைய சாப்பிடுங்கள்.

 

  • கலோரிகளை தவிர்க்க வேண்டாம். நீங்கள் இருவருக்கும் சேர்த்து சாப்பிட தேவையில்லை, ஆனால் நீங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மற்றும் அடிக்கடி சாப்பிடுங்கள்.

 

உடற்பயிற்சியானது உங்கள் உடலை வளையத்தக்கதாக மற்றும் நல்ல வடிவில் வைக்க மற்றும் உங்கள் கர்ப்ப முன்னேற்றத்தை எடுத்துச் செல்லும் மன அழுத்தத்தை எடுப்பதற்கும் அவசியம். ஆயினும், உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். நீங்கள் வேறு எதையும் செய்ய முடியாது என்றால் மெதுவாக நடைபயிற்சி மற்றும் மூச்சுப்பயிற்சி செய்வது ஒரு நல்ல யோசனையாகும்.

 

எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூக்கம் பெற முயற்சி செய்யுங்கள். உங்கள் உடல் புத்துயிர் பெறவும் மீளவும் உதவுவதற்கு உங்களுக்கு ஓய்வு தேவை.

 

மன அழுத்தம் மற்றும் அதிகமாக சோர்வு அடைவதை தவிர்க்கவும் – நீங்கள் மிக அதிக வேலைசெய்யவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் சராசரி நாள் மன அழுத்தத்தோடு இருந்தால், அதை இந்த நேரத்தில் எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள்.

 

இரசாயனங்களை தவிர்க்கவும்

 

கரு முதல் டிரைமிஸ்டரில் மிகவும் பாதிக்கப்படக்கூடியது. இந்த நேரத்தில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான ஆபத்து மிகவும் அதிகமாக உள்ளது. முக்கிய உறுப்புகளும் உடலமைப்புகளும் உருவாகி வருகின்றன என்பதால், சிசு நச்சு இரசாயனங்கள், போதை மருந்துகள், கதிர்வீச்சு, சிகரெட் புகை மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றுக்கு வெளிப்பட்டால் அவர்கள் எளிதில் பாதிக்கப்படுவார்கள்.

 

  • நீங்கள் ஒரு பயனர் என்றால், உடனடியாக போதை மருந்துகளை கைவிட வேண்டும்; புகைத்தல், புகையிலை மெல்லுவது மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றை விட்டுவிடுங்கள்.

 

  • செயலற்ற புகைத்தலை தவிர்க்கவும்; உங்கள் அருகில் உள்ள ஒருவர் சிகரெட் பிடித்தால், சிகரெட்டை அணைக்க அல்லது உங்கள் அருகே பிடிக்க வேண்டாம் என்று அவரிடம் வேண்டிக் கொள்ளுங்கள். மாசுபட்ட இடங்களில் இருந்து விலகி இருங்கள்.

 

  • வர்ணங்களில் இருந்து வரும் புகை, மற்றும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களுடன் பணிபுரிவதும் செய்யக் கூடாதவை பட்டியலில் உள்ளது.

 

  • இயற்கை அழகுசாதன பொருட்களைப் பயன்படுத்தவும்.

 

ஆனால் நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் கவனமாக இருந்தால் போதும்,  சித்தப்பிரமைக்குரியவர் ஆக இல்லை!

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.