• Home  /  
  • Learn  /  
  • குழந்தைக்கு காது துளையிடுவதற்கு முன்பு கவனிக்க பட வேண்டிய விஷயங்கள்.
குழந்தைக்கு காது துளையிடுவதற்கு முன்பு கவனிக்க பட வேண்டிய விஷயங்கள்.

குழந்தைக்கு காது துளையிடுவதற்கு முன்பு கவனிக்க பட வேண்டிய விஷயங்கள்.

12 Apr 2019 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

தாய்மார்களே, குழந்தைக்கு காது துளையிடுவதற்கு முன்பு  இதை கவனிக்கவும்.

 

விவிலிய காலங்கள் முதற்கொண்டு காது துளையிடப்பட்டிருக்கின்றன, இன்றும் ஒரு பொதுவான நடைமுறையாக இருக்கின்றன.சில சமுதாயங்களில், சிறுவர்கள் கூட தங்கள் காதுகளை குழந்தை பருவத்தில் துளையிட்டுள்ளனர். இதுபோல,குழந்தைக்கு ஏற்படும் வலியின் காரணமாக பெற்றோருக்கு இது கடினமான முடிவாகும். பல நிபுணர்கள் உண்மையில், குழந்தைகளின் காது துளையிடுதல்களுக்கு எதிராக, இது ஒரு கடினமான செயல் என்று கருதுகின்றனர். எனினும், நீங்கள் வேண்டும் என்றால், இந்த செயல்முறையை பின்வரும் குறிப்புகள் கொண்டு சிந்தித்து செய்தால்  எளிதாக செய்ய முடியும்.

 

எந்த வயதில் காது குத்தலாம்?

 

அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (AAP) படி, குழந்தையின் காதுகள் துளைக்கப்படுவதற்கு எந்த வயது வரமுறையும் இல்லை. எனினும் காது துளையிடல் தூய்மையாகவும், சரியாகவும் செய்யப்படுவது மிகவும் பாதுகாப்பானது. குழந்தையின் முதல் பிறந்தநாள் வரை சிலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் , சில குழந்தைகளுக்கு பிறந்த 12 நாட்களுக்குள் காதுகள் துளைக்கப்படுகின்றன.

 

ஏறத்தாழ இரண்டு அல்லது மூன்று வருடங்கள் வரை காத்திருந்து காதுகள் துளையிடப்பட்டால் நல்லது என்று AAP அறிவுறுத்துகிறது. இந்த வயதிற்கு மேல் செய்யும் போது குழந்தைகளுக்கு சில தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கும், இது தொற்று நோயிலிருந்து குழந்தையை பாதுகாக்கும்.

 

எங்கே காதுகளை துளையிடுவது?

 

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் காதுகள் தங்கள் உள்ளூர் நகைக்கடைகளில் துளைக்கப்படுவதை விரும்புகிறார்கள், அதே நேரத்தில் இந்த நடைமுறைகளைச் செயல்படுத்தும் மருத்துவ பயிற்சியாளரை சிலர் விரும்புகிறார்கள்.

 

காது துளையிடுதல் விதிமுறைகள் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வேறுபடுகிறது. எனவே, பின்வரும் குறிப்புகளை மனதில் கொள்ளுங்கள்:

 

செயல்முறையின் போது பயன்படுத்தப்படும் எல்லா கருவிகளும் தூய்மை படுத்தப்பட்டது என்பதை உறுதி செய்யவும்.

நல்ல புகழ் பெற்ற ஒரு பயிற்சியாளரை கண்டுபிடிக்கவும்.

மருத்துவ வழிகாட்டுதல்களைப் பற்றி நன்கு அறிந்திருப்பதால், காது துளையிடுவதைப் பழக்கமுள்ள மருத்துவ நிபுணர்களுக்கு முதல் விருப்பம் வழங்கப்பட வேண்டும்.

 

குழந்தைகளுக்கு காது குத்திக்கொள்வதற்கான செயல்முறை என்ன?

 

1: ஒரு ஆண்டிசெப்டிக் லோஷன் மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.நல்ல சுகாதாரத்துடன், தொழில்முறை கையுறைகளை அணிய வேண்டும்.

 

2: துளையிடுவதற்கு ஒரு ஊசி அல்லது  துப்பாக்கி ஒன்று பயன்படுத்தப்படுகிறது. இது தொழில்முறை பரிந்துரை மற்றும் அத்துடன் பெற்றோர் விருப்பம் சார்ந்திருக்கிறது. இரெண்டு முறையுமே வலிக்கு வழிவகுக்கும், ஆனால் 1-2 விநாடிகள் வரை மட்டுமே நீடிக்கும்.

 

3: தங்கத் தோடுகள் பெரும்பாலும் பயன்படுத்தபடுகிறது. இதில் தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளது. தங்கம் பூசப்பட்ட காதணிகள் பயன்படுத்தலாம்.

 

4: கிரீம்கள் பொதுவாக ஒரு வாரம் வரை ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்தப்படுகிறது. அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள்  காதிலிருந்து காதணிகளை மாற்றுவது பரிந்துரைக்கப்படுகிறது.

 

5: காதுகள் குத்த பட வேண்டிய இடம் காதின் கீழ் பகுதி, இது இயர் லோப் எனப்படும். இதை தவிர வேறு இடங்களில் குத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

 

காதுகள் துளையிட்ட பிறகு என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட  வேண்டும்?

 

○ இரு வாரத்திற்கு ஒருமுறை காதுகளை சுத்தம் செய்து தோடுகளை மாற்றவும்.

○ துளையிடப்பட்ட பகுதியை தொடுவதற்கு முன் எப்போதும் உங்கள் கைகளை நன்கு கழுவவும்.

○ தொற்றுநோயைத் தவிர்ப்பதற்காக 6 முதல் 8 வாரங்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை கிருமி நீக்கம் செய்ய வேண்டும். குழந்தையின் காதுகளை குழந்தை-பாதுகாப்பான சோப்புடன் கழுவுங்கள்.

○ காதுகள் இழுக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக குழந்தைகளுக்கு எளிதான உடையை  அணிவிக்கவும்..

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.