• Home  /  
  • Learn  /  
  • விபரீதம் நிறைந்த செய்திகளை நம் குழந்தைகள் கேட்பது சரிதானா?
விபரீதம் நிறைந்த செய்திகளை நம் குழந்தைகள் கேட்பது சரிதானா?

விபரீதம் நிறைந்த செய்திகளை நம் குழந்தைகள் கேட்பது சரிதானா?

18 Apr 2019 | 1 min Read

Dhara Mehta

Author | 15 Articles

 

நம்மை சுற்றி நடக்கும் விபரீதங்களைக் கண்டு, நேஹா, பேபிசக்ரா மாம்ஸ் அணியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் சமூக வலைத்தளத்தில் ஒரு கேள்வி எழுப்பினார். சரியான யோசிக்க வைக்கும் கேள்வி! இக்கேள்வி எல்லா அம்மாக்களுக்கும் ஒரு முறையாவது தனது மனதில் உதித்திருக்கும். இதற்கு சரியான விடை என்று ஒன்றும் இல்லை. அனால் நான் ஏன் கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

 

முதலில் உங்கள் குழந்தை 5 வயதிற்குக் குறைவாக இருந்தால், அவர்கள் முன்னிலையிலோ அல்லது அவர்களிடமோ இதைப் பற்றி உரையாடாமல் இருப்பது தான் நல்லது. அவர்களுக்கு இந்த விபரீத செய்தியின் ஆழமும் புரியாது. உட்கொள்ளவும் முடியாது. முடிந்தவரை அவர்களை டிவி, இன்டர்நெட் மற்றும் மொபைல் போனிலிருந்து தூரமாக இருப்பதே உகந்தது.

 

5 வயதிற்கு மேலான குழந்தைகளாக இருந்தால், மெதுவாக தகவலை மட்டும் சொன்னால் போதும். விரிவான செய்தியைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இப்படி செய்வதற்கு ரெண்டு காரணங்கள் உள்ளன.

 

பொது அறிவு

 

குழந்தைக்குத் தெரிய வேண்டும், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று. அதுவும் வார இறுதியில், என் குழந்தையுடன் சேர்ந்து உட்கார்ந்துதான் நான் செய்தித்தாளை வாசிப்பேன். நாங்கள் சேர்ந்து தலைப்புச் செய்திகளை வாசிப்போம். ஆனால் அது விபரீதம் இல்லாத பொது அறிவு நிறைந்த தகவலாக மட்டுமே இருக்க வேண்டும்.

 

பின்பு மெதுவாக நீங்கள் விபரீத செய்திகளை தலைப்பு செய்திகளாக மட்டுமே தெரிவிக்க வேண்டும். இயற்கை சீற்றம், தீவிரவாதிகளின் கதைகளைக் கவனமாக தெரிவிக்க வேண்டும். நீங்கள் இதைப் போன்ற செய்திகளைப் படிக்கும்போது உங்கள் குழந்தையின் முக பாவத்தைக் கவனிக்கவும். ஏதேனும் குழப்பம் தெரிந்தால் இந்த செய்திகளைத் தெரிவிப்பதை நிறுத்தவும். அதற்கு பின் அதைப் பற்றி அவர்களிடம் உரையாட வேண்டிய அவசியம் இல்லை.

 

குழந்தையை கெட்ட செய்திகளுக்குத் தயாரிக்கவும்

 

உலக நிலையின்படி எந்த ஒரு ஊரும் பாதுகாப்பாக இல்லை. எப்போ வேண்டும் என்றாலும், யாருக்கு வேண்டும் என்றாலும் ஆபத்து வரலாம். உடனே நம் குழந்தைகளை பயமுடுத்த வேண்டும் என்று நான் கூறவில்லை. நாளைக்கு என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், அவர்கள் அந்த கெட்ட நிலையை எப்படி தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்று நாம் கற்றுத் தர வேண்டும். ஆனால் அது உங்கள் விருப்பம்.

 

என் குழந்தைக்கு 7 வயது, நான் இப்படி தான் செய்தேன்.

 

மறுநாள் நான் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த நேரத்தில், ஏன் மகன் சட்டென்று படுக்கையில் இருந்து எழுந்தான். எழுந்தவுடன் தாளில் இருந்த புகைப்படத்தைக் கண்டு திகைத்துப் போனான் (ஹோட்டல் தாஜ் தீ பிடித்த புகைப்படம், கசாப் துப்பாக்கியுடன் இருந்தான்).

 

அவனைக் கண்டவுடன் நான் புரிந்து கொண்டேன். அவன் பயங்கரம் நிறைந்த செய்தியைக் கேட்க ஆரம்பித்து விட்டான். நான் அவனிடம் நடந்த முழு தாஜ் ஹோட்டலின் கதையைத் தெரிவித்தேன். அதை வெறும் செய்தியாக தெரிவிக்காமல், கதையாக தெரிவித்தேன்.

 

முழு கதையும் கேட்ட பிறகு என் குழந்தை என்னிடம் ஒரே கேள்வியைக் கேட்டான். ‘கசாபுக்கு என்ன நடந்தது?’. இப்படி ஒரு கொடிய தவறு செய்ததால் அவனை முடிவில் தூக்கிலிட்டார்கள் என்று தெரிவித்தேன். அவனுக்குப் புரிந்ததா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. காரணம் அவன் என்னிடம் கேட்டான், ‘எப்போது வரை?’ என்று.

 

அதை விடவும். நான் கூற விரும்புவது  இதுதான். கவனமாக குறிப்பிட்ட செய்திகளை மட்டுமே நம் குழந்தைகளுக்குத் தெரிவிப்பது நல்லது. நாம் பெற்றோரைவிட வேறு யாருக்கு நம் குழந்தையைப் பற்றி நன்றாக தெரியும்.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.