• Home  /  
  • Learn  /  
  • புதிதாகப் பிறந்த குழந்தைக்கு எப்படி பஞ்சொற்றிக் குளிப்பாட்டுவது?
புதிதாகப் பிறந்த குழந்தைக்கு எப்படி பஞ்சொற்றிக் குளிப்பாட்டுவது?

புதிதாகப் பிறந்த குழந்தைக்கு எப்படி பஞ்சொற்றிக் குளிப்பாட்டுவது?

24 Apr 2019 | 2 min Read

Dr. Mrinalini

Author | 86 Articles

 

சாதாரணமாக புதிதாய் பிறந்த குழந்தையின் பராமரிப்பு என்று வரும்போது, புதிய பெற்றோர்கள் தன் குழந்தையைக் குளிப்பாட்டுவதில் தான் அதிகமும் பயப்படுகிறார்கள். முதல் இரண்டு வாரங்களுக்கு, தொப்புள் கொடி நாண் விழுந்து மற்றும் அப்பகுதியில் புண் ஆறும்வரை, அவர்களை தொட்டியில் இட்டு குளிப்பாட்ட கூடாது. இந்த ஆரம்ப முதல் இரண்டு வாரங்களுக்கு, பஞ்சொற்றிக் குளியல் தான் அவசியம்.

 

பஞ்சொற்றிக் குளியல்

 

  •        புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஒரு வாரத்தில் 2 அல்லது 3 முறை மட்டும்தான் பஞ்சொற்றிக் குளியல் அவசியம்
  •        குழந்தையை பஞ்சொற்றிக் குளிப்பாட்டுவதற்கு முன் தங்கள் அறை வெப்பமாக இருக்கிறதா என்று பார்க்கவும்
  •        புதிதாகப் பிறந்த குழந்தைக்குக் குளிர்காற்றுப் பட்டால், அவர்கள் அழ ஆரம்பித்து விடுவார்கள். ஆதலால் தங்கள் அறை வெப்பமாக இருப்பது மிகவும் அவசியம்
  •        பஞ்சொற்றிக் குளியலுக்கு தேவையானவை:
  •          மாற்று சிறு மெத்தை
  •          சிறிய பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீர்
  •          தண்ணீரில் நன்றாக நனைக்கப்பட்ட துடைத்துணி
  •          பஞ்சுருண்டைகள்
  •          குழந்தையின் குளியல் சோப்
  •          குழந்தையின் ஷாம்பூ
  •          சிறிய கம்பளித் துண்டு
  •          குழந்தைக்கான பவுடர்
  •        குளிப்பாட்டுவதற்கு முன் உங்கள் கையில் மோதிரம் அல்லது வளையல் இருந்தால் அவற்றை அகற்றிவிடவும். இல்லையென்றால், உங்கள் குழந்தையைக் காயப்படுத்திவிடும்
  •        தண்ணீர் கசிவதைப் பிடித்துக்கொள்ள மாற்று மெத்தையை விரித்துவிடவும்
  •        சௌகரியத்திற்காக ஒரு கம்பளியினால் மூடவும்
  •        குழந்தை உடலின் ஒரு பாகத்தை கழுவும்போது, மற்றப்பாகத்தை கம்பளியினால் மூடி வைக்கவும்
  •        குழந்தையின் கண்ணை சற்று ஈரமாக்கப்பட்ட மென்மையான துணியால் சுத்தம் செய்யவும்
  •        முகத்தின் மற்றப் பாகங்களையும் மெதுவாக துடைக்கவும். இதற்காக சோப் உபயோகிக்க வேண்டியதில்லை
  •        உடலின் மற்றப் பாகங்களை சோப் போட்டுக் குளிப்பாட்டவும்
  •        குழந்தையின் உடலில் மடிப்புள்ள பகுதிகளான காதின் பிற்பகுதி மற்றும் அக்குள் இரண்டையும் சுத்தம் செய்யவும்
  •        குழந்தையின் டயபர் பகுதியை கடைசியாக கழுவவும்
  •        குழந்தையின் துவாரமுள்ள பகுதிகளான காதுகளின் உட்பகுதி போன்ற இடத்தை சுத்தம் செய்ய வேண்டாம். அவை தாமாகவே சுத்தம் செய்துகொள்ளும்
  •        சோப் போட்ட மற்ற பகுதிகளை மறக்காமல் கழுவி விடவும்
  •        வாரத்தில் ஒரு முறை மட்டும் குழந்தையின் தலைமுடியில் ஷாம்பூ தேய்க்கவும்
  •        ஷாம்பூ தேய்க்க, குழந்தையின் தலையை கையால் தாங்கிக்கொண்டு தாலாட்டுவதுபோல் வைத்துக் கொள்ளவும்.
  •        தண்ணீர்த் தொட்டிக்கு மேல் அவன் தலையைப் பிடித்துக்கொண்டு, வெதுவெதுப்பான தண்ணீரை மெதுவாக மென்மையாக உங்கள் கையால் தெளிக்கவும்
  •        தண்ணீர்க் குழாய்க்குக் கீழ் நேரடியாக குழந்தையின் தலையைப் பிடிக்காதீர்கள்
  •        பேபி ஷம்பூவினால் நுரை உண்டாக்கி, நன்றாக அலசிக் கழுவிவிட்டு, அடுத்த நிமிடமே கம்பிளியால் உலர்த்திவிடவும்
  •        உங்கள் குழந்தையின்  பஞ்சொற்றிக் குளியல் முடிந்த பிறகு, ஒரு மென்மையான கம்பிளியால் குழந்தையைச் சுற்றி, மெதுவாக உலர வைக்கவும்

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.