• Home  /  
  • Learn  /  
  • புதிதாகப் பிறந்த குழந்தைக்கு எப்படி குளியல் தொட்டியில் குளிப்பாட்டுவது?
புதிதாகப் பிறந்த குழந்தைக்கு எப்படி குளியல் தொட்டியில் குளிப்பாட்டுவது?

புதிதாகப் பிறந்த குழந்தைக்கு எப்படி குளியல் தொட்டியில் குளிப்பாட்டுவது?

24 Apr 2019 | 1 min Read

Dr. Mrinalini

Author | 86 Articles

 

பஞ்சொற்றிக்  குளியலை எப்போது நிறுத்த வேண்டும்? குளியல் தொட்டியைப் பயன்படுத்த தொடங்கலாம்?

 

எப்போது புதிதாகப் பிறந்த குழந்தைகள் தனது தொப்புள்கொடி நாண் விழுந்த பகுதி குணமடைந்த பிறகு, அவர்களை குளிப்பாட்டுவதற்கு குளியல் தொட்டியைப் பயன்படுத்த தொடங்கலாம்.

 

குளியல் தொட்டி

 

  •  ஒரு குழந்தை தான் சுயமாக குளிக்கத் தொடங்கும்வரை, பெரிய குளியல் தொட்டியைப் பயன்படுத்த விரும்பமாட்டான். ஆதலால் முடிந்தவரை, ஒரு சிறிய பிளாஸ்ரிக் குளியல் தொட்டியை வாங்குவதே நல்லது.
  • குளியல் தொட்டி வாங்கும்போது அடியில் துவாரமுள்ள சிறிய குளியல் தொட்டியை வாங்கவும்
  • அப்போதுதான் குளியலுக்குப் பிறகு தண்ணீரை எளிதாக வெளியே வடித்து விடலாம்
  • குளிப்பாட்டுவதற்கு முன் தங்கள் அறை வெப்பமாக இருப்பது மிகவும் அவசியம். இல்லையென்றால், குளிர்காற்றுப் பட்டவுடன், அவர்கள் அழ ஆரம்பித்து விடுவார்கள்.
  • குளிப்பாட்டுவதற்கு முன் உங்கள் கையில் மோதிரம் அல்லது வளையல் இருந்தால் அவற்றை அகற்றிவிடவும். இல்லையென்றால், உங்கள் குழந்தையைக் காயப்படுத்திவிடும்

 

தொட்டி குளியலுக்கு தேவையானவை:

 

  • கோப்பை – 1
  • குழந்தையைக் கழுவ உதவும் துணி – 1
  • மென்மையான குழந்தைக்குரிய சோப்
  • குழந்தைக்குரிய ஷாம்பு
  • மென்மையான கம்பிளி
  • குளியல் தொட்டியை கோப்பையைப் பயன்படுத்தி 5 முதல் 7 செமீ அளவு வரை வெதுவெதுப்பு நீரால் நிரப்பவும்
  • மறக்காமல் உங்கள் மணிக்கட்டின் உட்பகுதியை பயன்படுத்தி தண்ணீரின் வெப்பநிலையைச் சோதிக்கவும்.
  • குழந்தையின் தலை மற்றும் கழுத்தை கையால் தாங்கிப் பிடிக்கவும்
  • குழந்தையின் தலையை மெதுவாகத் தண்ணீருக்குள் தாழ்த்தவும்
  • குழந்தையின் முகத்தைத் துடைக்க சோப்பைப் பயன்படுத்த வேண்டாம். மாறாக கழுவும் துணியைப் பயன்படுத்தவும்
  • குழந்தையின் உடலை சோப்பால் தேய்த்து, அலசி விடவும்.
  • அதற்குப்பின் இளஞ்சூட்டு நீரால் குழந்தையின் உடலில் ஊற்றிக் கழுவவும்
  • குழந்தையும் தனது குளியலை நன்றாக மகிழ்ந்தனுபவிப்பான்
  • அதற்கு பின், குழந்தையின் தலைமுடியை ஷாம்புவினால் மசாஜ் செய்து, ஓரு கோப்பை நீரினால் அலசி விட்டுக் கழுவவும்
  • குழந்தையைக் குளிப்பாட்டிவிட்டவுடன், கம்பிளியால் சுற்றி மெதுவாக உலர விடவும்
  • குழந்தையின் தோல் உலராமல் இருக்க பேபி லோஷனைப் பயன்படுத்தலாம்

 

கவனிக்க வேண்டியவை:

  • குழந்தையைக் குளிப்பாட்டும்போது நன்றாக தாங்கிப் பிடிக்கவும்
  • குளிப்பாட்டும்போது குழந்தையைத் தனியே விட்டுவிடாதீர்கள். அதேபோல, வேறொரு பிள்ளையின் மேற்பார்வையிலும் விட்டுவிடாதீர்கள்.   
  • குழந்தைப் பராமரிப்பாளரிடம் குழந்தையைக் குளிப்பாட்டும்படி கேட்காதீர்கள்
  • தண்ணீர் சூடாக இல்லையே என்று எப்போதும் கவனமாக இருக்கவும், இல்லையென்றால், குழந்தையின் மென்மையான தோல் சுட்டுவிடும்

 

#babycare

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.