• Home  /  
  • Learn  /  
  • தாய்ப்பாலில் நிறமாற்றல் வருதல் சரிதானா?
தாய்ப்பாலில் நிறமாற்றல் வருதல் சரிதானா?

தாய்ப்பாலில் நிறமாற்றல் வருதல் சரிதானா?

24 Apr 2019 | 1 min Read

Dr. Mrinalini

Author | 86 Articles

 

தாய்ப்பால் தயாரிப்பு என்பது குழந்தையை பிரசவித்த தாய்மார்களின் உடலில் நிகழும் ஒரு கலப்படமற்ற அதிசய உருவாக்கம். தாய்ப்பால் ஒன்றை மட்டும்தான் செயற்கை முறையால் தயாரிக்கும் முறை இன்று வரை கண்டறிந்ததில்லை. அப்படிப்பட்ட தாய்ப்பாலில் நிற மாற்றம் ஏற்படுமா? அது கவலைக்குரியதா இல்லையா என்பதை விரிவாக காண்போம்.

 

தாய்ப்பால் எந்த நிறங்களில் பொதுவாக மாறும்?

 

  •        மஞ்சள் நிறம் – தாய்ப்பால் ஊட்டும் தாய் அதிக நாட்களாக தொடர்ந்து கொடுத்துக் கொண்டு வந்தால், வெள்ளை நிறம் மஞ்சள் நிறமாக மாற்றம் ஏற்படும்.
  •        நீல நிறம் – சில காலத்திற்குப் பிறகு, மஞ்சள் நிறம் நீலம் கலந்த வெள்ளை நிறமாக மாறலாம்.
  •        பிங்க் நிறம் – பிங்க் நிறத்தில் தாய்ப்பால் மாறிவிட்டால், தாய்ப்பால் ஊட்டுவதை உடனே நிறுத்தவும். உதிரம் கலந்திருப்பதால், மார்பகத்தில் கோளாறைக் குறிக்கிறது. அதையும் மீறி தாய்ப்பாலை ஊட்டினால், அது பிறகு குழந்தையில் பல பெரிய பிரச்சனைகளை உண்டாக்கலாம். குழந்தைக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றும்.
  •        இப்படி நிற மாற்றம் ஏற்படும்போது, ஒரு தடவை மருத்துவ ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.

 

தாய்ப்பாலில் இரத்தமும் சேர்ந்து வெளிவருவது சரியானதா?

 

  •        இந்த கேள்விக்கு ஆம் என்றும் இல்லை என்றும் பதில் சொல்லலாம்.
  •        தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் மார்பகங்களில் வெளிப்பக்கமாக, அதாவது நிப்பில்கள் போன்ற இடத்தில் காயம் ஏற்பட்டு இருந்தால், இரத்தக்கசிவின் காரணமாக, அது தாய்ப்பாலில் கலந்துவிடும். அந்த காயம் சரியானவுடன் தாய்ப்பாலில் உதிரம் கலக்காது.
  •        மாறாக மார்பகங்களில் எந்த ஒரு காயமும் இல்லை என்றால், அது சிக்கலாகி விடும்.
  •        உடனடியாக இரத்தம் கலந்த பாலை தாய்மார்கள் குழந்தைகளுக்குத் தருவதை நிறுத்திவிட்டு, மார்பகத்தை முழுமையாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

 

தாய்ப்பால் ஊட்டுமுன் தாய்மார்கள் கவனிக்க வேண்டியவை என்னென்ன?

 

  •        தாய்ப்பால் ஊட்டுமுன் தனது உடலில் உள்ள நோய்கள் ஏது? தனக்கு இரத்தத்தால் பரவும் நோய் இருக்கிறதா? தனக்கு AIDS இருக்கிறதா? இது போன்ற அத்தனை கேள்விகளுக்கும் தகுந்த பரிசோதனை செய்து பதில் கண்டறிய வேண்டும்.
  •        அதற்கு பின்னர்  தான் குழந்தைக்குப் பாலூட்டுவது நல்லது. குழந்தையின் உடலுக்கும் எந்தவித கேடும் வராது.

 

இந்த தாய்ப்பாலில் நிற மாற்றம் ஏற்படுவது சாதாரணமானதா?

 

  •        தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் தாம் சாப்பிடும் உணவுகளை பொறுத்தும், தாய்ப்பாலின் நிறம் மாறலாம்
  •        தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் அதிகம் பீட்ரூட் சாப்பிட்டால், சிவப்பு நிற தாய்ப்பால் வெளி வர  வாய்ப்புண்டு
  •        கீரை வகைகள் அதிகம் சாப்பிட்டால், பச்சை நிற தாய்ப்பால் வெளி வர  வாய்ப்புண்டு.
  •        ஆரஞ்சு நிறமுள்ள கனிகளை தாய்மார்கள் அதிகம் சாப்பிட்டால், ஆரஞ்சு நிற தாய்ப்பால் வெளி வர  வாய்ப்புண்டு.
  •        ஆதலால், எந்த வித நிற மாற்றமாக இருந்தாலும், உடனே மருத்துவ ஆலோசனையும் பரிசோதனையும் மேற்கொண்ட பின்னரே தாய்ப்பால் ஊட்டுதல் நல்லது.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.