• Home  /  
  • Learn  /  
  • 4 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அடம்பிடிக்கும் சச்சரவுகளை கையாள்வது எப்படி
4 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அடம்பிடிக்கும் சச்சரவுகளை கையாள்வது எப்படி

4 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அடம்பிடிக்கும் சச்சரவுகளை கையாள்வது எப்படி

4 May 2019 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

4 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அடம்பிடிக்கும் சச்சரவுகளை கையாள்வது தந்திரமானதாக இருக்கலாம். நீங்கள் அவர்களை எப்படி சமாளிக்கலாம் என்பதை  இங்கே பார்க்கலாம். அடம் ஒரு அழகான விஷயம் அல்ல. குழந்தைகள் அழுது புரல்வதை பார்த்தால் பொறுமையுள்ள  பெற்றோர்களுக்கும் விரக்தியை ஏற்படுத்துகிறது.

 

4 வயது ஆன பின்னரும் கூட, குழந்தை முன்னர் இருந்ததைவிட வலுவாக அடம்பிடிக்கலாம். சில தொழில்முறை உதவிகளைப் பெற வேண்டுமா என்ற கேள்விக்கு பதில் ஆம் மற்றும் இல்லை…

 

எப்படி 4 வயது குழந்தையின் பிடிவாதத்தை சமாளிப்பது?

 

4 வயதில் மனச்சோர்வு ஏற்படுவது பொதுவாக குழந்தைக்கு உள்ளேயே பூட்டப்பட்டிருக்கும் சில அச்சங்களைக் குறிக்கிறது. அத்தகைய சந்தர்ப்பங்களில், பெற்றோர் உணர்ச்சிகளை வெளிக்கொணர ஒரு பாதுகாப்பான வழியைக் கொடுக்க வேண்டும்.

 

ஒரு நேர்மறையான செய்தியை அனுப்ப வேண்டும்:

 

குழந்தையிலிருந்து எதிர்பார்ப்பது பற்றிய தெளிவான செய்திகளை கொடுங்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வழிமுறைகளைப் பற்றி குறிப்பிட்டிருக்க வேண்டும். உதாரணமாக, “நீ உன் படுக்கையறைக்குச் செல்ல வேண்டும்” அல்லது “இப்போது பாட்டியிடம் மன்னிப்பு கேள்” “நான் இதை பொறுத்துக் கொள்ள மாட்டேன்” அல்லது “நாங்கள் வீட்டிற்கு போகிறோம்” என்று சொல்வது சிறந்தது. குழந்தை தனது உணர்ச்சிபூர்வமான நிலையை வெளிப்படுத்த பல்வேறு வழிகளோடு வழங்கவும்.  விளையாடுவதற்கு ஒரு பார்க்கிற்கு செல்ல அல்லது அவரை ஒரு வேறு ஏதாவது செயலில் ஈடுப்படுத்தவும். வீட்டிலேயே ஒரு “டான்றம் அட்டவணை” செய்யுங்கள். அவரை கோபப்படுத்தும் அல்லது விரக்தியுறச் செய்யும் விஷயங்களை அவரை வரையவும் விளக்கவும் செய்யுங்கள்.

 

எதை வேண்டுமானாலும் பெற  அடத்தை பயன்படுத்த குழந்தைகளை அனுமதிக்காதீர்கள்.

 

அவர் விரும்பும் அனைத்தையும் அவர் பெற,அவருடைய தலையை முட்டிக்கொள்வது தவறானது என்பதை நீங்கள் அவரிடம் வலியுறுத்த வேண்டும். வம்பு செய்வது எந்தவொரு நன்மையும் தராது என்பதை முன்பே குழந்தையிடம் எச்சரிக்கப்பட வேண்டும்.

 

‘இல்லை’ என்று சொல்ல,கேட்க கற்றுக்கொள்ளுங்கள்:

 

எத்தனை முறை முடியாது என்று சொல்கிரார்கள் என்று கண்காணியுங்கள். சில நேரங்களில் இது இருபுறத்திலும் மன அழுத்தம் தரக்கூடியதாக இருக்கும், எனவே சோர்வு சண்டைகளை எதிர்த்து போராடுவது நல்லது. கோரிக்கை மிகவும் சிரமமாக இல்லை என்றால்,  ஒரு முறை சரி என்று சொல்வது தவறில்லை.

 

ஒருபோதும் புறக்கணித்து விட வேண்டாம்.பெற்றோர் கவனத்தை பெற மட்டுமே அடம்பிடித்தல் காரணம் என்றால், குழந்தையை தனியாக விட்டுவிடுவது சிறந்தது. இதுபோன்ற நடத்தை ஏற்கத்தக்கதல்ல , இனிமேல் பொறுத்துக் கொள்ளப்படமாட்டாது என்ற தெளிவான செய்தியை குழந்தைக்கு இது வழங்கும்.  இது அவரது அமைதியை மீண்டும் பெற குழந்தைக்கு நேரம் கொடுக்கும்.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.