• Home  /  
  • Learn  /  
  • நான்கு சிறந்த உட்புற பாரம்பரிய விளையாட்டுகள்
நான்கு சிறந்த உட்புற பாரம்பரிய விளையாட்டுகள்

நான்கு சிறந்த உட்புற பாரம்பரிய விளையாட்டுகள்

4 May 2019 | 1 min Read

Dr. Mrinalini

Author | 86 Articles

 

கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. உங்கள் குழந்தைக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசை தீவிரமாக இருக்கும், சரிதானே? அம்மா அப்பா இருவருக்கும் விடுமுறை கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது? நீங்களும் குழந்தையிடம் வீட்டிலேயே விளையாடு என்று கூறிவிடுவீர்கள். அப்படி கூறும்போது, குழந்தைகளும் கைப்பேசியிலுள்ள விளையாட்டுகளையே விரும்புகின்றனர். கைப்பேசியை விடாமல் பார்த்து கண் பார்வையும் கெட்டுவிடும். வெளிப்புற விளையாட்டு விளையாடுவதற்கும் பல நேரமும் பெற்றோர்கள் வெளியே போக அனுமதி கொடுப்பதில்லை.

 

இக்கால பல தாய் தந்தையர்களுக்கும் வேறு எந்த உட்புற விளையாட்டையும் விளையாட சொல்லி ஆலோசனை கூற முடியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கும் நமது பாரம்பரிய விளையாட்டுகள் என்னவென்று தெரிவதில்லை.

 

கவலை வேண்டாம்! உங்கள் குழந்தைக்கு வீட்டினுள்ளே விளையாட முடிகிற 4 சிறந்த உட்புற விளையாட்டுகளை நாங்கள் இங்கே விவரிக்கிறோம். விளையாடும் முறை மட்டுமல்ல, இந்த விளையாட்டுகளின் பலன்களையும் நாங்கள் விவரிக்கிறோம்.

 

தாயம்:

  • தரையில் தாயக்கட்டத்தை வரைத்து, தாயத்தைக் குலுக்கிபோட என்ன எண்ணிக்கை வருகிறதோ அதற்கு ஏற்றவாறு காய்களை நகர்த்த வேண்டும். எதிரே விளையாடும் போட்டியாளர் தன் காயை வெட்டாமல் தப்ப வேண்டும். அதே நேரம் நாமும் அவர் காயை வெட்ட வேண்டும்.
  • இந்த விளையாட்டு விளையாடுவதால் குழந்தையின் அறிவு வளர்ச்சி மற்றும் கணிதத் திறன் மேம்படும். விதிமுறைகளைப் பின்பற்ற உதவும் இந்த விளையாட்டு, நாம் நம் வாழ்வில் எப்படி விதிமுறைக்கு உட்பட்டு வாழ வேண்டும் என்ற பாடத்தையும் கற்பிக்கிறது.

 

பல்லாங்குழி

  • சின்ன கற்களை குழியில் நிரப்பி வைத்துக் கொள்ளவும். தங்களின் குழியிலிருந்து காய்களை எடுத்து அனைத்து குழியிலும், குழிக்கு ஒன்று என்கிற வீதத்தில், ஒவ்வொன்றாக வலதிலிருந்து இடதுபுறமாக போட வேண்டும். காய்கள் தீர்ந்து விட்டால், அடுத்த குழியிலிருந்து காய்கள் எடுத்து மறுபடியும் போட வேண்டும். ஒரு வேளை, அடுத்த குழியில் ஏதுமில்லை என்றால் அதற்கு அடுத்த குழியில் உள்ள காய்களை எடுத்துக் கொள்ளலாம். இப்படி எதிரில் உள்ளவரும் இடுவர். முடிவில் யாரிடம் ஆகிக காய் உள்ளதோ, அவர்தான் வெற்றியாளர்.
  • இந்த விளையாட்டு விளையாடுவதால் குழந்தையின் எண்ணிக்கை திறன் மேம்படும். விரல்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கணிதத்திறன், மற்றும் அறிவுத்திறனும் வளரும். வணிகத்திறனும், சேமிப்புத்தன்மையும் கூடும்

 

ஆடுபுலியாட்டம்

  • இந்த விளையாட்டும் தாயம் போன்றதே. இருவித காய்களைக் கொண்டு ஆட வேண்டும். ஒரு விதம் ஆடு. மற்றொன்று புலி. இவ்விளையாட்டில் புலியின் பிடியில் சிக்காமல் ஆட்டைக் காப்பாற்ற வேண்டும். இதுதான் இந்த விளையாட்டின் கரு.
  • இவ்விளையாட்டின் மூலம், தன்னம்பிக்கையும் புத்திக் கூர்மையும் வளரும். என்னதான் புலியாக இருந்தாலும், சாதுர்யமாக எப்படி புலியை மடக்க வேண்டும் என்கிற சாமர்த்தியத்தையும், சிக்கலைத் தீர்க்கும் அறிவையும் இந்த விளையாட்டு கற்றுக் கொடுக்கும்.

 

பாம்பு ஏணி ஆட்டம்

பாம்பின் பிடியிலிருந்து எப்படி சிக்காமல் தப்பிப்பது? கிடைக்கும் இடங்களிலெல்லாம் எப்படி படியேறி முன்னேறுவது? இதுதான் இந்த விளையாட்டின் கரு.
இவ்விளையாட்டின் மூலம், தன்னம்பிக்கை வளரும். வாழ்க்கை என்பது ஏற்றமும் இறக்கமும் நிறைந்தது. எப்படி இறக்கத்தைக் கண்டு பயப்படாமல் வெற்றியை நோக்கிச் செல்வது என்ற பாடத்தை இந்த விளையாட்டு கற்றுக் கொடுக்கும்.

 

இப்படி ஒவ்வொரு விளையாட்டும் நமக்கு ஒவ்வொரு பாடத்தைக்  கற்றுக் கொடுக்கும். உங்களுக்கும் இப்படி ஏதேனும் உட்புற பாரம்பரிய விளையாட்டு தெரிந்திருந்தால், மறக்காமல் ஷேர் செய்யவும்.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.