குழந்தையுடன் சேர்ந்து தூங்குவது சரியா?

குழந்தையுடன் சேர்ந்து தூங்குவது சரியா?

4 May 2019 | 1 min Read

Dr. Mrinalini

Author | 86 Articles

 

குழந்தையுடன் சேர்ந்து தூங்குவது சரியா? அப்படி எத்தனை நாள் வரை குழந்தையுடன் சேர்ந்து தூங்கலாம் என்று இந்த சந்தேகம் உலகில் உள்ள எல்லா தாய்மார்களுக்கும் வரும். அதனைக் குறித்து கேள்வி-பதில் முறையில் நாம் விவரமாக காணலாம்.

 

குழந்தையுடன் சேர்ந்து தூங்குவது சரியா?

சரிதான்

குழந்தையுடன் சேர்ந்து தூங்குவதன் பயன் என்ன?

 

  • குழந்தைகளுடன் பெற்றோர்கள் சேர்ந்து தூங்கும்போது, குழந்தைகள் தாம் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்ற ஒரு நம்பிக்கை முளைக்கிறது.
  • அவர்களின் தன்னம்பிக்கையும் அதிகமாக வாய்ப்புள்ளது.
  • தாம் தனியாக இல்லை. தனது பெற்றோர்களுக்கு தன் மீது அதிக பாசமும் அக்கறையும் இருக்கிறது என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படும்.
  • ஆதலால், குழந்தைகளும் நாளடைவில் நெருக்கமாக பெற்றோருடன் பழகுவர்.

 

சிலர் குழந்தையுடன் சேர்ந்து தூங்கினால் அபாயம் ஏற்படும் என்று கூறுகின்றனர். அதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா?

 

  • சில ஆய்வுகள் அப்படி கூறுவது உண்மைதான். ஆனால் அது மிகமிக அரிதானது. சிட்ஸ் (சடன் இன்ஃபன்ட் டெத் சிண்றோம்) அதாவது திடீர் குழந்தை மரணம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதே ஆய்வின் முடிவு.
  • மிகவும் அரிதான சில நேரங்களில் மட்டும்தான், பெற்றோர்கள் தம்மை அறியாமல் குழந்தையின் மீது புரண்டு விடுகின்றனர். அப்படி நடக்கும்போது, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் . அதனால் தான் மரணமும் ஏற்படுகின்றது.
  • எந்த பெற்றோரும் இப்படி ஆழ்ந்து தூங்க மாட்டார்கள். அதனால், நீங்கள் குழந்தையுடன் சேர்ந்தே தூங்கலாம். தவறில்லை.
  • வேண்டுமென்றால், உங்களின் படுக்கைக்கு பக்கத்தில் ஒரு குட்டிப் படுக்கையோ அல்லது தொட்டிலையோ வைத்துக் கொள்ளலாம்.
  • உங்கள் படுக்கையறையில் அவ்வளவு இடம் இல்லை என்றால் நீங்கள் உங்களுடனே குழந்தையைத் தூங்க வைக்கலாம்.
  • முடிந்தவரை நீங்களே கவனமாக குழந்தையுடன் தூங்கவும். அவ்வளவுதான்.

 

குழந்தையுடன் சேர்ந்து தூங்கும்போது ஏதேனும் தடையோ அசவுகரியமோ உள்ளதா?

 

  • இது ஒரு தனிப்பட்ட கேள்வி. அசவுகரியம் இருக்கிறதா இல்லையா என்று அவரவர் தான் தீர்மானிக்க வேண்டும்
  • உங்களின் கூடவே குழந்தை உறங்கினால், அதன் அசைவுகளில் ஒரு கவனம் இருக்கும். குழந்தை அழுகிறதா இல்லையா என்று கவனமாக இருக்கலாம். பசியால் அழுதால் உடனே பாலூட்டவும் வழியுண்டு.
  • அசவுகரியம் என்னவென்றால், செக்ஸ் வாழ்வில் தடை ஏற்படலாம். அதே போல, பெற்றோர்களால் ஆழ்ந்து தூங்க முடியாது. குழந்தையைக் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணம் தூங்கும்போதும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.
  • ஆதலால், உங்களுக்கு எது சவுகரியமோ, எது முக்கியமோ அதற்கேற்றவாறு நடந்து கொள்ளவும்.

 

குழந்தை எந்த வயது வரை உங்களுடன் சேர்ந்து தூங்கலாம்?

 

  • குழந்தை தானாகவே எப்போது தனிமையை விரும்புகிறானோ, அந்த நாள் வரை குழந்தையுடன் நீங்கள் சேர்ந்து தூங்கலாம்.
  • நீங்களே குழந்தையைத் தனியறையில் போய் தூங்க சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள்
  • பொதுவாக சில குழந்தை ஏழு அல்லது பத்து வயது வரையே, பெற்றோருடன் சேர்ந்து தூங்க விரும்புகின்றனர்.
  • சில குழந்தை தனியாக தூங்கும்போது பயம் ஏற்படும்.  ஆதலால், அதையும் மனதில் வைத்துக்கொண்டு, உங்கள் குழந்தைக்கு எது சரியோ, அவ்வாறே நீங்கள் அணுகலாம்.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.