• Home  /  
  • Learn  /  
  • கர்ப்ப காலத்தில் எது சாதாரணம்? எது அசாதாரணம்?
கர்ப்ப காலத்தில் எது சாதாரணம்? எது அசாதாரணம்?

கர்ப்ப காலத்தில் எது சாதாரணம்? எது அசாதாரணம்?

8 May 2019 | 1 min Read

Dr. Mrinalini

Author | 86 Articles

 

பற்பல பெண்களுக்கு, பொதுவாக முதல் பிரசவமாக இருந்தால் எந்த அறிகுறிகள்  சாதாரணம் என்றும், அசாதாரணம் என்று தெரிவதில்லை. ஒவ்வொரு கர்ப்பிணிகளுக்கும் அறிகுறி வெவ்வேராக இருக்கும். சிலருக்கோ அந்த அறிகுறி அளவுக்கு மீறியும் இருக்கலாம்; எல்லா நேரமும் இருக்கலாம். இதனால் பல கர்ப்பிணிகளுக்கும் குழப்பமாக இருக்கிறதா? பதற்றம் வேண்டாம்; உங்களுக்கான தகவல் இதோ!

 

 

 

1. இடைவிடாது கீழ் முதுகு வலி

 

 

கீழ் முதுகு வலி கிட்டத்தட்ட  65% கர்ப்பிணிகள் அனுபவிக்கும் அறிகுறிதான். கர்ப்பப்பை பெரிதாகுந்தோறும், வயிற்றிலுள்ள தசைகளை வலுவிழக்க செய்யும். உங்களின் சுரப்பிகளோ தசைநார்களை வலுவிழக்க செய்யும். இதனால் உங்களின் தொற்றநிலையில் மாற்றம் ஏற்படலாம். அதனால், பின்முதுகுக்கும் இடுப்புக்கும் அழுத்தம் ஏற்படும்.

 

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

 

  • வலி அதிகளவில் இருத்தல், தாங்க முடியாத நிலையில் இருத்தல் அல்லது வலியின் வீரியம் மாறி மாறி இருத்தல்
  • கால்கள், ஆசனம் மற்றும் பிறப்புறுப்பில் உணர்ச்சியில்லாமல் போகுதல்
  • காய்ச்சல், குமட்டல் மற்றும் சிறுநீரில் இரத்தம் கலக்கல்; இந்த அறிகுறிகளுடன் முதுகு வலி இருந்தால், சிறுநீரக தொற்று நோய் இருப்பதாக அர்த்தம்
  • கீழ் முதுகு வலி இருந்தாவது ட்ரைமெஸ்டேரின் இறுதியிலோ அல்லது மூன்றாவது ட்ரைமெஸ்டேரில் இருந்தாலோ பிரசவ வலியாகவும் இருக்கலாம்

 

2. கை கால் வீங்கல்

 

கை கால் வீங்கல் பொதுவாக கர்ப்பிணிகளுக்கு ஏற்படும். காலையில் குறைவாக இருக்கும். நேரம் போக போக வீக்கம் கூடும். மூன்றாவது ட்ரைமெஸ்டேரில் சிலருக்கு வீக்கம் மிகவும் அதிகமாக இருக்கும். கோடை காலங்களிலும் வீக்கம் அதிகமாக இருக்கும்

 

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

  • இந்த வீக்கம் ப்ரீஎக்லாம்ப்சியா என்கிற கோளாறில் அதிகமாக இருக்கும். இது உங்களையும் உங்கள் கருவில் உள்ள குழந்தையின் உயிரும் ஆபத்துக்குள்ளாக்கும்.
  • திடீரென வீக்கம் ஏற்பட்டு உங்கள் முகமும் வீங்கி இருந்தால், உங்களின் இரத்த அழுத்தத்தையும், சிறுநீரையும் உடனடியாக பரிசோதனை செய்து பார்க்கவும்.
  • ஒரு காலின் வீக்கம் மற்ற காலை விட அதிகமாக இருந்தால், அல்லது தொடை பாரமாக இருந்தால், இரத்தம் கட்டுகிறது என்பதே அர்த்தம்.

 

3. சுளுக்கு மற்றும் லேசான ரத்தத்துளி போக்கு

முதல் ட்ரைமெஸ்டேரில் இந்த சுளுக்கு மற்றும் லேசான ரத்தத்துளி போக்கு வருவது சகஜம்தான். இதற்கு காரணம், கர்ப்பப்பையில் ஏற்படும் அழுத்தம்தான். சிலருக்கு கர்ப்ப காலம் முழுவதும் ஏற்படும். உடற்பயிற்சி அல்லது உடலுறவுக்குப் பிறகு, இந்த அறிகுறிகள் தெரியப்படும்.

 

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

  • முதல் ட்ரைமெஸ்டேருக்குப் பிறகு, சுளுக்கு மற்றும் லேசான ரத்தத்துளி போக்கு இருந்தால், மருத்துவரிடம் அவசியம் தெரிவிக்க வேண்டும்.
  • பிரசவ காலம் நெருங்க நெருங்க, ரத்தத்துளி போக்கு அதிகமானால், உடனே மருத்துவமனையில் செல்லவும். நஞ்சுகொடி கர்ப்பபையிலிருந்து நீங்கி இருந்தால் ரத்தப்போக்கு வரும் வாய்ப்பு அதிகம்.

 

4. சோர்வு

சுரப்பிகளுள் முக்கியமாக பிரோஜெஸ்டிரோன் அளவில் மாற்றம் ஏற்படுவதால், சோர்வு அதிகமாக கர்ப்பிணிகளில் காணமுடிகிறது. முதல் ட்ரைமெஸ்டேர் முடியும்போது, உங்களின் உடல் சரியாகி இருக்கும். சற்று தெம்பும் வந்திருக்கும். பிரசவ காலம் நெருங்க நெருங்க, எடை கூட ஆரம்பிக்கும். அப்போதுதான் மறுபடியும் சோர்வு வர வாய்ப்பு உள்ளது.

 

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

  • முதல் ட்ரைமெஸ்டேர் முடிந்த பிறகும் உங்களின் சோர்வில் எந்த மாற்றமும் இல்லையா?
  • சோர்வு, தலைச்சுற்றல், தூக்கமின்மை, அதிகமாகுதா? மருத்துவரை உடனே அணுக வேண்டும்.
  • தூக்கமின்மை என்பது ரத்தசோர்வு மற்றும் தைரோய்டு கோளாறுகளுக்கான அறிகுறி. உங்களுக்கு இந்த பிரச்சனைகள் ஏற்கனவே இருந்தால், மறக்காமல் மருத்துவரிடம் கூறவும்.

 

5. குமட்டல்

70% கர்ப்பிணிகளுக்கு குமட்டல் மற்றும் வாந்தி இருப்பது சகஜம்தான். சிலருக்கு குறைவாக இருக்கும்; சிலருக்கு அதிகளவில் இருக்கும்.

 

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

  • ஹைபெர்மேசிஸ் கிராவிடேரம் என்கிற கோளாறு கர்ப்ப காலங்களில் பெண்களில் காணப்படும். ஒரு நாளில் ஐந்துக்கும் மேற்பட்ட தடவை வாந்தி எடுத்தால், எடை குறைவு மற்றும் உடல் வறட்சி ஏற்படும். இதை உறுதிப்படுத்த மருத்துவரை உடனே அணுக வேண்டும்.
  • குமட்டல் மற்றும் வாந்தியுடன் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, தலைவலி, சோர்வு அல்லது தலைச்சுற்றல் ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகவும்.

 

6. யோனி வெளியேற்றம்

சுரப்பிகள் மற்றும் கர்ப்பபையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், மணமற்ற பால் போன்ற நிறமுள்ள யோனி வெளியேற்றம் ஏற்படும்.

 

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

  • யோனி வெளியேற்றம் மஞ்சள், பச்சை அல்லது பிரவுன் நிறத்தில் இருத்தல்
  • கெட்ட வாசனை ஏற்படுதல்
  • அதிகமான அரிப்பு ஏற்படுதல்
  • பிரசவம் நெருங்க நெருங்க, ம்யூகஸ் பிளக் வெளியேறும். அது கட்டியாகவும் லேசான ரத்தம் கலந்தும் இருக்கும். இது பிரசவத்திற்குரிய முதல் அறிகுறி. சில நேரங்களில் அரிப்பும் ஏற்பட வாய்ப்புண்டு.

 

7. வயிற்று வலி

வாயுத்தொல்லை, மலச்சிக்கல் மற்றும் தசைநார் வலி ஆகியன உங்களுக்கு வயிற்று வலியை ஏற்படுத்தும்.

 

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

  • அதிகமாக இடைவிடாது வயிற்றுவலி இருத்தல்
  • வயிற்றுவலியுடன் ரத்தபோக்கு, காய்ச்சல், குளிர், தலைச்சுற்றல், வாந்தி அல்லது குமட்டல் இருத்தல்
  • முதல் ட்ரைமெஸ்டேரில் வயிற்றுவலி அதிகமாக இருந்தால், கருச்சிதைவு அல்லது எக்டோபிக் கர்ப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. கவனிக்கவும்!
  • கடைசி இரண்டாவது அல்லது மூன்றாவது ட்ரைமெஸ்டேரில் வயிற்றுவலி அதிகமாக இருந்தால், குறை பிள்ளைப்பேறு ஏற்பட வாய்ப்புண்டு. கவனிக்கவும்!

 

8. கருவில் குழந்தைக்கு அசைவு இல்லையா?

25வது வாரத்திலிருந்து கருவில் குழந்தையின் அசைவை உணரலாம். அசைவின் வேகத்தில் குறைவு இருந்தால், பிராணவாயு போதுமான அளவு இல்லை என்று அர்த்தம். உடனே மருத்துவரை அணுகவும். அசைவு இல்லையென்றால் உணவு உண்ணவும்; மற்றும் நீர்  அருந்தவும். இல்லையெனில், வெந்நீரில் குளிக்கவும். எந்தவிதத்திலும் அசைவை உணர முடியவில்லை என்றால், மருத்துவரை அணுகவும்.

 

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

  • இரத்தப்போக்கு
  • அதிக யோனிவெளியேற்றம்
  • அதிகமான கர்ப்பப்பை சுருங்கல்
  • குழந்தையின் அசைவில் கோளாறு

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.