• Home  /  
  • Learn  /  
  • இரண்டாவது குழந்தைக்கு முயற்சிக்கிறீர்களா?
இரண்டாவது குழந்தைக்கு முயற்சிக்கிறீர்களா?

இரண்டாவது குழந்தைக்கு முயற்சிக்கிறீர்களா?

10 Sep 2019 | 1 min Read

Komal

Author | 138 Articles

ஒரு குழந்தையே போதும் என்று நினைப்பவர்கள் வெகுசிலரே! ஒரே ஒரு பிள்ளை மட்டுமே இருந்தால் அதிக செல்லம் கொடுத்து கெடுத்துவிடும் வாய்ப்பும் மிக அதிகம். ஒரு பிள்ளைக்கு துணையாக இன்னொரு பிள்ளை இருப்பதால் ஒருவருக்கொருவர் துணையாகவும், பகிர்ந்து கொள்ளும் உணர்வுடனும் வளர்வார்கள். நம் முன்னோர்களின் எண்ணப்படி, நம் காலத்திற்குப் (இறப்பிற்கு) பிறகு ஒருவொருக்கொருவர் ஆதரவாகவும், உறுதுணையாகவும் எல்லா சூழ்நிலைகளிலும்  துணை நிற்பர். 

 

இரண்டாவது குழந்தை பெறுவதற்கான நடைமுறை சிக்கல்கள்:

 

  • முதன்முறையாக கருத்தரித்தப் பின்னர்,  இரண்டாவது குழந்தைக்கு முயற்சிக்கும் போது, நிச்சயம் எளிதில் கருத்தரிக்க முடியும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் முதல் குழந்தைக்கு பின்னர் கூட மலட்டுத் தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
  • இருப்பினும், இதில் ஒரு நல்ல செய்தி என்னவெனில், இந்த பிரச்சனையை பெரும்பாலும் எளிதில் குணப்படுத்திவிடலாம். எப்படியெனில் ஏற்கனவே குழந்தை பிறந்திருப்பதால், இரண்டாவது குழந்தைக்கு முயற்சிக்கும் போது ஏற்படும் பிரச்சனையானது அவ்வளவு கஷ்டமானதாக இருக்காது. 
  • குறிப்பாக இந்த பிரச்சனை பெண்களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை. ஆண்களுக்கும் தான் இத்தகைய பிரச்சனை ஏற்படும்.

 

இந்த பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்கள்:

 

  1. தற்போதுள்ள காலத்தில் 40 வயது ஆன பெண்கள் எளிதில் கருத்தரிக்கின்றனர். ஆனால் உண்மையில் 30 வயதானாலே, கருத்தரிக்கும் தன்மையானது குறைய ஆரம்பிக்கும். 
  2. இதற்கு காரணம் ஹார்மோன்களின் செயல்பாடுகள் தான். எப்படியெனில் ஒருவர் முதல் குழந்தைக்கு 30-35 வயதில் கருத்தரித்தாலே, அது ஒரு அதிர்ஷ்டம் தான். அதற்கு பின்னர் இரண்டாவது குழந்தைக்கு முயற்சிக்கும் போது, கருத்தரிக்கும் தன்மையானது முற்றிலும் குறைந்துவிடும். எனவே தான், கருத்தரிக்க முடிவதில்லை. மேலும் 35 வயதிற்கு மேல், இறுதி மாதவிடாய் நெருங்குவதால், கருத்தரிக்க முடியாமல் போகும்.
  3. சில சமயங்களில், அறுவை சிகிச்சை அல்லது முதல் பிரசவத்தில் சிசேரியன் என்றால், அப்போது ஏற்படும் தழும்புகளை ஏற்படுத்தும் திசுக்கள் கருப்பையைச் சுற்றிலும் இருக்கும். இதனாலும் தடை படலாம். எனவே இதனை மருத்துவரிடம் கேட்டு தீர்வு காண்பது நல்லது.
  4. நார்த்திசுக் கட்டிகள், சில சமயங்களில் பெரியதாக வளர்ந்து, கருப்பையில் அடைப்பை ஏற்படுத்தி, கருவுறுதலுக்கு இடையூறாக இருக்கும். இத்தகைய பிரச்சனை பொதுவாக 30 வயதிற்கு மேல் ஏற்படுவது தான் அதிகம். இத்தகைய பிரச்சனையை மருந்துகள் மற்றும் சரியான சிகிச்சை மூலம் சரிசெய்யலாம்.
  5. சாதாரணமாகவே புகைப்பிடித்தல், ஆண், பெண் இருவருக்குமே மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். ஆண்களுக்கென்றால், விந்தணுவின் உற்பத்தி குறைந்துவிடும். பெண்களுக்கென்றால், கருப்பையில் தங்கும் கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி, கருவை தங்க விடாமல் செய்யும். ஆகவே இந்த செயலும் இரண்டாவது கருவுறுதலுக்கு தடையாக இருக்கலாம்.
  6. முதல் கர்ப்பத்தின் போது ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது நாளடைவில் இரண்டாம் குழந்தைக்கு முயற்சிக்கும் போது தடையாக இருக்கும். உதாரணமாக, கருப்பையில் ஏதேனும் தொற்றுகள் இருந்து, அதனால் கருப்பையில் காயங்கள் ஏற்பட்டால், அது இரண்டாம் குழந்தைக்கு முயற்சிக்கும் போது இடையூறை விளைவிக்கும்.
  7. முதல் பிரசவத்தின் போது, குழந்தை இடம் மாறி இருந்து பிறந்தால், அது இரண்டாம் குழந்தைக்கு முயற்சிக்கும் போது தடையை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த மாதிரியான பிரசவத்தின் போது, அண்டக்குழாய்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதோடு, தழும்புகளை உண்டாக்கும் திசுக்களும் சுற்றி இருக்கும்.
  8. முதல் பிரசவத்திற்கு பின் நீரிழிவு வந்தால், அது மீண்டும் கருவுறுதலில் தடையை ஏற்படுத்தும்.
  9. தற்போது பெரும்பாலான பெண்கள் தைராய்டு பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர். இவ்வாறு தைராய்டு சுரப்பியானது சரியாக தைராய்டு ஹார்மோன்களை சுரக்காவிட்டால், அது மாதவிடாய் சுழற்சியை பாதிப்பதால், கருவுறுதலில் பிரச்சனை ஏற்படுகிறது.

 

என்ன செய்ய வேண்டும்?

  • உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்,  தேவையான மருத்துவ சோதனைகளை மேற்கொள்ளுங்கள்.
  • நீரிழிவு  நோய் இருந்தால் , அதை கட்டுக்குள் கொண்டுவர மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுங்கள். 

 

விடாமுயற்சி நற்பயனளிக்கும். கவலை வேண்டாம்.

 

#babychakratamil

#babychakratamil

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.