20 Nov 2019 | 1 min Read
Komal
Author | 138 Articles
பொதுவாக பெண்கள் கர்ப்பகாலத்தில் பலவகை உடல் மற்றும் மன மாற்றத்தை அனுபவிக்கின்றனர். இது பெரும்பாலும் ஹார்மோன்களின் ஏற்ற இறக்கத்தினால் நிகழ்கிறது. முதல் ட்ரைமெஸ்டரில் காலை குமட்டல், வாந்தி போன்றவற்றால் இதை உணர இயலாது. இரண்டாவது ட்ரைமெஸ்டரில் இருந்து இது தொடங்கும்.
காரணங்கள்:
நான்காவது மாத இறுதியில் அதாவது, 16-வது வாரத்திலிருந்து கருப்பையின் அளவு அதிகரிப்பதால் வயிற்றின் சுற்றளவும் அதிகரிக்க ஆரம்பிக்கும். கருப்பையின் பெருக்கம் வயிற்றை அழுத்துவதால், இரைப்பையிலுள்ள அமிலம் தொண்டைக்குழாயை நோக்கி வெளியே தள்ளப்படுவதால் அஜீரணம், நெஞ்சு கரிப்பது போன்ற உணர்வுகள் தோன்றும், மஞ்சள் காமாலை இருக்கிறதா என்பதையும் இந்த நேரத்தில் பரிசோதனை செய்ய மருத்துவர் அறிவுறுத்துவார். இயல்பாக விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகூட கர்ப்பக் காலத்தில் அஜீரணத்தை உண்டாக்கும். இரைப்பைக்கும், உணவுக் குழாய்க்கும் இடையிலுள்ள வால்வில் அளவுக்கதிகமாக ஏற்படும் தளர்வினால் கடுமையான, எரிவது போன்ற வலி மார்பில் ஏற்படுகிறது. இந்த நிலையில் இரைப்பையிலுள்ள அமிலம், உணவுக் குழாய்க்கு வரும் சூழ்நிலை ஏற்படுகிறது. 70 சதவிதத்துக்கும் அதிகமான கர்ப்பிணிகள் நெஞ்செரிச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். வளரும் குழந்தை இரைப்பையை முன்னோக்கித் தள்ளுவது ஒரு காரணம்.
தீர்வுகள்:
தவிர்க்கவேண்டியவை:
இந்த நெஞ்செரிச்சல் பிரச்சனைக்கு பொதுவாக ஆங்கில மருத்துவத்தை காட்டிலும் எளிய பாட்டி வைத்தியமே பெரும்பாலும் கை கொடுக்கும். மேற்கூறிய அனைத்தையும் கருத்தில் கொண்டு அதன்படி உணவுகளையும் உணவு முறைகளையும் பின்பற்றுவது நெஞ்செரிச்சலுக்கான தீர்வாக அமையும்.
பேனர் படம்: vanguardngr
மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.
A