• Home  /  
  • Learn  /  
  • குழந்தைகளின் பால்/தண்ணீர் பாட்டில்களை சுத்தம் செய்வது எப்படி?
குழந்தைகளின் பால்/தண்ணீர் பாட்டில்களை சுத்தம் செய்வது எப்படி?

குழந்தைகளின் பால்/தண்ணீர் பாட்டில்களை சுத்தம் செய்வது எப்படி?

28 Jan 2020 | 1 min Read

Komal

Author | 138 Articles

குழந்தைகளுக்கு அவர்கள் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில், பால் குடிக்கும் பால் பாட்டிலில் இருந்து அதிக கிருமிகள் பரவ வாய்ப்புகள் அதிகம். அதைத் தடுக்க இவ்வகை பாட்டில்களை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். இந்தப் பதிவை படிக்கும் முன் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள். நல்ல தரமான பிளாஸ்டிக் பாட்டில்களை உங்கள் குழந்தைக்கு தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.  

பாட்டில்களை சுத்தம் செய்யும் முறை:

குழந்தை பாலோ, தண்ணீரோ குடித்த பின்பு அப்படியே போட்டு வைக்காமல் முடிந்தவரை சீக்கிரமே கழுவி விடுங்கள். குழந்தையின் பாட்டில் சுத்தம் செய்ய பாட்டில் பிரஷ் வைத்திருங்கள். அதை வைத்து நன்கு கழுவிய பின் அந்த பிரஷ்ஷை கட்டாயம் வெயிலில் காய வையுங்கள். வெதுவெதுப்பான தண்ணீரில் பாட்டிலை போட்டு கழுவலாம். பாட்டில் கழுவ பிரத்யேகமாக கிடைக்கும் சோப்பு திரவத்தை சில சொட்டுகள் தண்ணீரில் சேர்த்து நீர்த்த திரவமாக பயன்படுத்தலாம். இந்த வகை பிரத்யேக லிக்விட் சோப்பு சிறந்த கிருமிநாசினியாக இருப்பதால் குழந்தைகளுக்கு பக்க விளைவுகள் ஏற்படுத்தாது. மிகவும் பாதுகாப்பானது. கழுவிய பிறகு சூடான நீரில் 10-15 நிமிடங்கள் போடுவது சிறந்தது. நிப்பிள், பாட்டில், மூடி எல்லாவற்றையும் தனித்தனியாக தேய்த்து கழுவி தண்ணீரில் போடுவது நல்லது. அதேபோல பிளாஸ்டிக் பாட்டிலில் சூடான பாலையோ ஊற்றி வைக்க வேண்டாம்.  

பால்பாட்டிலை சுத்தமாக வைக்க சில டிப்ஸ்:

  1. குழந்தைகளுக்கு பாட்டிலில் பாலை ஊற்றி கொடுக்கும் முன், பாட்டிலை சுடு தண்ணீரில் கழுவி பின்னர் பாலை ஊற்றி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் பாட்டிலை சூடான தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின்னர் கொடுத்தால் பாட்டிலில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும். மேலும் பாட்டிலில் உள்ள மூடியை நன்கு கழுவ வேண்டும். ஏனெனில் அதுவே குழந்தையின் வாய்க்குள் செல்கிறது, அதன்மூலமே கிருமிகள் குழந்தையின் வாயில் செல்லும். ஆகவே அதனை நன்கு சூடான நீரில் கழுவிய பின்னர் கொடுக்க வேண்டும். 
  2. எப்போது குழந்தைகளுக்கு பாட்டிலில் பாலை கொடுக்கும் போதும், குழந்தைகளால் பால் முழுவதையும் குடிக்க முடியாது. ஏனெனில் அதன் வயிற்றானது கொஞ்சம் கொஞ்சமாகத் தான் வளர்ச்சி அடையும். மேலும் குழந்தைகளால் எவ்வளவு பால் குடிக்க முடிகிறதோ, அவ்வளவு மட்டும் குடித்துவிடும். ஆகவே அந்த மீதிப் பாலை அப்படியே வைக்காமல், கொட்டிவிடவும். இல்லாவிட்டால் பாட்டிலில் பாக்டீரியா மற்றும் நாற்றம் அடிக்க ஆரம்பித்துவிடும். 
  3. பாட்டிலானது ஈரமாக இருந்தால் பாக்டீரியா மற்றும் கிருமிகள் தங்கிவிடும். ஆகவே முதலில் பாட்டிலை சுடு தண்ணீரில் கழுவியதும், குளிர்ந்த நீரிலும் சற்று கழுவ வேண்டும். பிறகு உடனடியாக ஒரு சுத்தமான துணியில் நன்கு துடைத்துவிட வேண்டும். அப்படி துடைக்காமல் கழுவி விட்டு, மூடி வைத்துவிட்டால் அந்த பாட்டிலில் தண்ணீர் அல்லது பால் நாற்றமானது அப்படியே இருக்கும். 
  4. தினமும் பாட்டில் மூடியை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் சுடு தண்ணீரில் நன்கு பாட்டிலையும், பாட்டில் மூடியையும் கழுவ வேண்டும். 

குழந்தைகளில் பால் பாட்டில்களை முறையாகச் சுத்தம் செய்யாவிட்டால், பாட்டிலில் கண்ணுக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ ஒட்டிக்கொண்டிருக்கும் சிறு அளவு கிருமிகூட கிருமித்தொற்றாக மாறி குழந்தைக்கு வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, தொண்டை புண், காதுவலி உள்ளிட்ட, சாதாரணமானது முதல் சீரியஸானதுவரை 13 வகையான பிரச்னைகளை உண்டாக்கக்கூடும். அதனால் ஒவ்வொரு பயன்பாட்டுக்குப் பின்னாரும் பாட்டிலைக் கழுவி வெந்நீரில் இட்டு ஸ்டெரிலைஸ் செய்யவேண்டியது அவசியம்.  

ஒரே பால் பாட்டிலை வருடக்கணக்கில் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மாதம் ஒருமுறை குழந்தைகளின் பால் பாட்டிலை மாற்றவும். ப்ளாஸ்டிக் பாட்டிலில் பால் குடிக்கும் குழந்தை பால் தீர்ந்ததும், பால் வெளிவரும் நிப்பிளைக் கடித்து கடித்து ஓட்டையாக்கிவிடும். அந்த ஓட்டையான நிப்பிள் கிருமித்தொற்றுக்கு எளிதில் இலக்காகும். எனவே, நிப்பிலிலும் கவனம் வைக்கவும்.  

குழந்தை பால் குடிக்கும் நேரம் தவிர்த்து பாட்டிலை சுத்தமான ஓர் இடத்தில் மூடி வைத்திருக்க வேண்டும். மாறாக, பால் தீர்ந்தவுடன் அந்தப் பாட்டில் தரையில் உருண்டு கிடக்க, அடுத்த முறை பால் கொடுக்கும்போது அதைத் தேடி எடுப்பதற்குள் தரையில் உள்ள கிருமிகள் எல்லாம் அதில் இடம்பிடித்திருக்கும். 

குழந்தை தூங்கியபடியே பால் குடிப்பது, தூங்கும்போது பால் பாட்டில் அதன் வாயிலேயே இருப்பது இவையெல்லாம் அதன் பல் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் விஷயங்கள். இதனால் குழந்தையின் பால் பற்களில் சொத்தை ஏற்படலாம் என்பதுடன் அதன் பல் வரிசையும் சீரற்ற முறையில் இருக்கும்.

ஆதாரம்: naturecode

எப்போது பாட்டிலை ஸ்ட்ரிலைஸ் செய்யலாம்?

எப்போதும் கழுவும் போது இளஞ்சூடான நீரில் கழுவுவது இன்னும் நல்லது. ஸ்டீல் பாட்டிலை தினமும்கூட சில நிமிடங்கள் இளஞ்சூடான/சூடான நீரில் போடலாம். ஆனால், பிளாஸ்டிக் பாட்டிலை இளஞ்சூடான நீரில் போட்டு ஸ்டரிலைஸ் செய்யுங்கள். நன்கு பிரஷ் போட்டு கழுவுங்கள். குழந்தை பால் குடித்து முடித்த பின், உடனே பாட்டிலை கழுவுங்கள். அப்படியே போட்டு வைக்க வேண்டாம். பாட்டில், ரப்பர், ரப்பர் ரிங் போன்ற அனைத்தையும் ஸ்டரிலைஸ் செய்ய வேண்டும்.  

எவ்வளவு காலத்துக்கு ஒரு பால் பாட்டிலை பயன்படுத்தலாம்?

பாட்டில் நிறம் மாறி இருந்தால் உடனே பாட்டிலை மாற்றுங்கள். பால் கசிந்தால் துர்நாற்றம் வந்தால் பாட்டில் உப்பி இருந்தால் சின்ன சின்ன கோடுகள் இருந்தால் பிளாஸ்டிக் உருகி பாட்டில் மெலிந்து இருந்தால் இந்த அறிகுறிகள் உடனேயே பாட்டிலை மாற்ற வேண்டும். பொதுவாகவே 2 மாதத்துக்கு ஒருமுறை பாட்டிலை மாற்றுங்கள். 

பால் பயன்பாட்டை குறைக்க என்ன செய்ய வேண்டும்?

ஸ்டீல் டம்ளரில் ஸ்ட்ரா வைத்து வரும் டம்ளரலில் குழந்தைகளுக்கு பால் குடிக்க பழக்கப்படுத்தலாம். முன்பெல்லாம், பால் குடிக்க வைக்க கோப்பையில் கொடுத்து, ஸ்பூனில் கொடுத்துப் பழக்கப்படுத்தினோமோ அதுபோல செய்யலாம்.  

இக்கட்டுரை பால் பாட்டில் குறித்த தங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு அளிக்கும் வகையில் அமைந்திருக்கும் என்று  நம்புகிறோம். இன்னும் உங்கள் மனதில் எழும் சந்தேகங்களை கீழிருக்கும் கமெண்ட்ஸ் கட்டத்தில் பதிவு செய்வதன் மூலம்  தங்கள் கேள்விக்கான விடையைப் பெறலாம். 

பேனர் படம்:  stayathomemum & naturecode

#babycare #babyhygiene

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.