• Home  /  
  • Learn  /  
  • உங்கள் குழந்தைக்கு கொடுக்கப்படும் தாய்ப்பால் போதும் என்பதை அறிவது எப்படி?
உங்கள் குழந்தைக்கு கொடுக்கப்படும் தாய்ப்பால் போதும் என்பதை அறிவது எப்படி?

உங்கள் குழந்தைக்கு கொடுக்கப்படும் தாய்ப்பால் போதும் என்பதை அறிவது எப்படி?

1 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

தாய்ப்பால் என்பது பிறந்த குழந்தைக்கு கிடைக்கக்கூடிய சூப்பர் ஊட்டச்சத்தாகும். தாய்ப்பாலில் உள்ள அளவிற்கு சத்து வேறு எதிலும் இருக்குமெனவும் சொல்லிவிட முடியாது. இத்தகைய தாய்ப்பாலை நாம் சரியான அளவில் கொடுத்தால் மட்டுமே குழந்தைகள் அதனை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், தன் குழந்தைக்கு தாய்ப்பால் போதுமென்பதை எப்படி புரிந்துக்கொள்வது என்ற குழப்பம் பல அம்மாக்களுக்கு உண்டு. அவர்களுக்கான சிறப்பு பதிவு தான் இது.

 

குழந்தைகளுக்கு தாய்ப்பால் போதுமென்பதற்கான அறிகுறிகள் என்னென்ன?

  • தாய்ப்பால் கொடுத்து முடிக்கும்போது உங்களுடைய மார்பகம் மிகவும் மென்மையாக இருப்பதை உணர்வீர்கள்
  • தாய்ப்பால் குடித்து முடித்தவுடன் நம்முடைய பிள்ளைகள் மிகவும் திருப்தியாக இருப்பதுபோல் பாவனை செய்வார்கள்
  • உங்கள் பிள்ளைகள் பிறக்கும்போது இழந்த எடையை மீண்டும் பெற்று, தொடர்ந்து சரியான எடை விகிதத்தை கொண்டிருக்க செய்வார்கள்
  • தாய்ப்பால் பருகிய பிள்ளைகள் குறைந்தது ஒரு நாளைக்கு 6 டயப்பர்களை நனைக்க செய்வார்கள். ஆனால், பிறந்த பிள்ளைகள் கொலஸ்ட்ரம் எனும் சீம்பாலை பருகுவதால் 1 அல்லது 2 டயப்பர்களை மட்டுமே நனைக்க செய்வார்கள்
  • முதல் மாதத்தில், நம்முடைய பிள்ளைகள் ஒரு நாளைக்கு மூன்று முறை மலம் கழிக்க செய்வார்கள். பிறந்த குழந்தைகளின் மலமானது முதல் 5 – 7 நாட்களில் லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

 

குழந்தைகளுக்கு தாய்ப்பால் போதுமான அளவு கிடைக்காவிட்டால் காணப்படும் அறிகுறிகள் என்னென்ன?

  • அவர்களின் எடை தொடர்ந்து குறைந்துக்கொண்டே வரும். உங்களது பிள்ளைகளின் எடை பிறந்து 5 நாட்களுக்கு பிறகும் தொடர்ந்து குறைந்துக்கொண்டே வருவதாக நீங்கள் நினைத்தால் டாக்டரை உடனடியாக அணுகவும்
  • பிறந்து 5 நாட்களுக்கு பிறகும் அவர்கள் குறைவான அளவே சிறுநீர் மற்றும் மலம் கழித்தால், போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கவில்லை என்பதை புரிந்துக்கொள்ளவும்
  • பிறந்த குழந்தைகள் 5 நாட்களுக்கு பிறகு அடர் நிறத்தில் மலம் கழித்தால், போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கவில்லை என அர்த்தமாகும்
  • உங்கள் குழந்தையின் சிறுநீர், ஆப்பிள் ஜூஸ் போல அடர் நிறத்தில் இருந்தால், போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கவில்லை என அர்த்தமாகும்
  • அவர்களுக்கு தாய்ப்பால் கொடுத்து முடித்ததாக நீங்கள் நினைக்கும்போது, அவர்கள் கூடுதலாக குடிக்க அடம் பிடித்தால், போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கவில்லை என அர்த்தமாகும்
  • உங்கள் பிள்ளைகளின் வாய் அல்லது கண்கள் வறண்டு காணப்பட்டால், போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கவில்லை என அர்த்தமாகும்
  • வெகுநேரத்துக்கு அவர்கள் தாய்ப்பால் குடித்தாலும் டாக்டரை அணுகுவது நல்லது
  • தாய்ப்பால் கொடுத்த முடித்த பின்பும் உங்களது மார்பகம் மென்மையாக இல்லாவிட்டால் போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கவில்லை என அர்த்தமாகும்

என் குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்காவிட்டால் என்னவாகும்?

  • அவர்களுடைய உடலில் நீர்ச்சத்து குறைய தொடங்கலாம்
  • எடை இழப்பு தொடர்ந்து ஏற்படக்கூடும்
  • உடல் சோர்ந்து காணப்படக்கூடும்

 

தாய்ப்பாலை அதிகரிக்க என்ன வழி?

அதிகம் தண்ணீரை குடிக்கவும்:

உங்கள் உடலில் நீர்ச்சத்து இருந்தால் மட்டுமே, உங்கள் பிள்ளைகளுக்கு தேவையான அளவு தாய்ப்பால் கிடைக்கும். அதனால், போதுமான அளவு நீர்ச்சத்து உங்கள் உடலில் இருப்பதை உறுதி செய்துக்கொள்ளவும். நீர்ச்சத்து நிறைந்த பழங்களையும், காய்கறிகளையும் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.

 

ஓய்வு வேண்டும்:

போதுமான அளவிற்கு நீங்கள் ஓய்வில் இருப்பதை உறுதி செய்யவும். உங்களுடைய ஓய்வும் தாய்ப்பால் சுரக்க அதிகம் உதவும். எந்நேரமும் வேலை என இருந்தால் ஓய்வின்றி உங்கள் உடல் சோர்ந்து விடும். அப்போது பிள்ளைகளுக்கு போதுமான அளவு தாய்ப்பால் கொடுப்பது இயலாத ஒன்றாக ஆகிவிடும்.

 

கவலை வேண்டாம்:

தனக்கு தாய்ப்பால் மிகவும் கம்மியாக சுரப்பதாக பலரும் கவலைக்கொள்கின்றனர். உண்மை என்னவென்றால், உங்களின் கவலையே தாய்ப்பால் சுரப்புக்கு தடையாக அமைந்துவிடுகிறது. உங்களின் பிள்ளைகள் கவனமாகவும், சுறுசுறுப்பாகவும், சரியாக சிறுநீர் மற்றும் மலம் கழித்துக்கொண்டு இருந்தால் நிச்சயம் கவலைப்பட வேண்டிய அவசியமே உங்களுக்கு இல்லை என்பதை முதலில் நினைவில் கொள்ளவும்.

 

தாய்ப்பால் கொடுக்கும் நேரம்:

ஒரு அட்டவணை போட்டு அதனை பின்பற்றி தாய்ப்பால் கொடுக்காதீர்கள். நீங்கள் எவ்வளவு தாய்ப்பால் தருகிறீர்களோ, அவ்வளவு தாய்ப்பால் உங்கள் மார்பில் சுரக்கும் என்பதை மறவாதீர். குறிப்பாக முதல் சில வாரங்கள், உங்கள் பிள்ளைக்கு எப்போதெல்லாம் தாய்ப்பால் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் தருவது நல்லது.

 

மன அழுத்தம் கூடாது:

உங்களின் மன அழுத்தம் போதிய அளவு பால் சுரக்க தடையை ஏற்படுத்தும். தேவைப்பட்டால், உங்கள் கணவர், வீட்டில் உள்ளவர்களின் ஆதரவோடு தாய்ப்பால் தருவதே சிறந்ததாகும். குறிப்பாக, முதல் சில வாரங்கள் வரும் விருந்தினர்களை அதிகம் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. அவர்கள் இருக்கும்போது தாய்ப்பால் தருவது, உங்களுக்கு கூடுதல் அசவுகரியத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.

 

பாட்டில் பால் தருவதில் தாமதம்:

தாய்ப்பால் குறையும் முன்பே அவசர அவசரமாக பாட்டில் பால் கொடுக்க தொடங்குவதை தவிர்க்கவும். பிள்ளைகளுக்கு தாய்ப்பால் கிடைக்கும்போது, எதிர்காலத்தில் அது கூடுதல் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.

எனவே தாய்மார்களே! நீங்கள் கொடுக்கும் தாய்ப்பால் உங்கள் பிள்ளைகளுக்கு போதுமா? இல்லையா? என்பதை இப்போது தெளிவாக புரிந்திருப்பீர்கள் என நம்புகிறோம். தாய்ப்பால் என்பது அள்ள அள்ள குறையாத அமிர்தம் போன்றது. அதனை பிள்ளைகளுக்கு தேவைக்கேற்ப வழங்கி அவர்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தலாம் வாருங்கள்.

#childnutrition #breastfeeding

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.