• Home  /  
  • Learn  /  
  • இயற்கையான வழியில் தாய்ப்பாலை அதிகரிக்க செய்வது எப்படி?
இயற்கையான வழியில் தாய்ப்பாலை அதிகரிக்க செய்வது எப்படி?

இயற்கையான வழியில் தாய்ப்பாலை அதிகரிக்க செய்வது எப்படி?

6 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

தாய்ப்பால் என்பது தாய்க்கு பிள்ளைக்கும் உண்டான பந்தத்தை அதிகரிக்க செய்யக்கூடியது என்று கூட நாம் சொல்லலாம். அதோடு மட்டுமல்லாமல், பிற்காலத்தில் பல நோய்களுக்கு தடுப்பு மருந்தாகவும் தரும் தாய்ப்பால் இருக்கிறது. ஆம், பிள்ளைகளுக்கு எதிர்ப்பு சக்தியை வழங்குவதில் தாய்ப்பால் முக்கியமான பங்காற்றுகிறது. இதற்காக நாம் டாக்டர்களின் ஆலோசனையை பெற்றாலும், ஒரு சில வீட்டிலுள்ள பொருள்களை கொண்டும் அதிகரிக்க செய்யலாம். அது என்னவென்பதை இந்த பதிவின் மூலம் நாம் காண்போம் வாருங்கள்.

 

தாய்ப்பாலை அதிகரிக்க செய்யும் 20 உணவுகள் எவை?

1. ஓட்ஸ்மீல்:

ஓட்ஸில் உள்ள முழு தானியங்கள் தாய்ப்பால் தரும் அம்மாக்களுக்கு சிறந்த உணவாக அமைகிறது. இந்த ஓட்ஸை கொண்டு பிஸ்கட்டுகள், பிரெட், கஞ்சி போன்றவை செய்து நாம் சாப்பிடலாம்.

 

2. பார்லி:

பார்லியில் நார்ச்சத்து இருப்பதால், தாய்ப்பால் தரும் அம்மாக்களுக்கு சிறந்த உணவாக அமைகிறது. இந்த பார்லியை கொண்டு சூப், கறி, கஞ்சி ஆகியவை செய்து நாம் சாப்பிடலாம்.

 

3. கேரட்:

கேரட்டில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இந்த கேரட்டை நாம் பச்சையாகவோ அல்லது உணவுடனோ சேர்த்து கொள்ளலாம். இதனை நாம் தினசரி எடுத்துக்கொள்ளும்போது தாய்ப்பால் சுரப்புக்கு உதவுகிறது.

 

4. வெந்தயம்:

வெந்தய இலைகளும், விதைகளும் தாய்ப்பால் சுரப்புக்கு உதவக்கூடிய ஒன்றாகும். இந்த வெந்தயத்தை சூப் வைத்து நீங்கள் குடிக்கலாம். ஆனாலும், வெந்தயத்தை அளவுக்கதிகமாக சேர்த்துக்கொண்டால் வயிற்று எரிச்சலை ஏற்படுத்தும் என்பதால் கவனம் வேண்டும். மருத்துவரின் ஆலோசனை பெற்று அதன் பிறகு எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

 

5. பூண்டு:

தாய்ப்பால் தரும் அம்மாக்கள் பூண்டை அவர்களின் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனாலும், அளவுக்கதிகமாக பூண்டு சேர்த்துக்கொள்வது பிள்ளைகளுக்கு கோலிக் பிரச்சனையை உண்டாக்கும்.

 

6. பெருஞ்சீரகம்:

இது தாய்ப்பால் அதிகரிப்புக்கு அற்புதமான ஒன்றாகும். பெருஞ்சீரகத்தை நாம் தண்ணீரிலோ, தேநீரிலோ, சூப்பிலோ கூட போட்டு சாப்பிடலாம். இதை கஞ்சியாகவும் வைத்து நாம் குடிக்கலாம்.

 

7. சீரகம்:

சீரகமும், தாய்ப்பால் சுரப்புக்கு உதவுகிறது. சீரக தண்ணீரையும் நீங்கள் குடிக்கலாம்.

 

8. கீரை வகைகள்:

கீரையில் ஊட்டச்சத்துக்கள் அதிகமிருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இவை, தாய்ப்பால் சுரப்புக்கு மட்டும் உதவாமல், மகப்பேறுக்கு பின் ஏற்படும் சிக்கல்களில் இருந்தும் வெளிவர உதவுகிறது. குறிப்பாக பசளி கீரை போன்றவற்றை நாம் உணவோடு சேர்த்து கொள்ளலாம்.

 

9. பாகற்காய்:

கசப்பான உண்மை என்றாலும், பாகற்காய் தாய்ப்பால் சுரப்புக்கு சிறந்ததாகும்.

 

10. கிழங்கான் மீன்:

இதில் அதிகமாக புரதமும், குறைந்த அளவில் மெர்குரியும் உள்ளது. அதோடு வைட்டமின் D, B12, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவையும் இருப்பதால் தாய் மற்றும் பிள்ளை இருவருக்கும் சிறந்த உணவாக அமைகிறது. இந்த வகை மீனை அதிகமாக சேர்த்துக்கொள்ளும்போது உங்களுடைய தாய்ப்பால் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

 

11. முருங்கை காய்:

முருங்கை காயில் நுண்ணிய ஊட்டச்சத்துக்கள் அதிகமுள்ளது. குறிப்பாக கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அடங்கியது முருங்கைக்காய். தாய்ப்பால் தரும் அம்மாக்கள் முருங்கைக்காயை அவர்களின் உணவோடு சேர்த்துக்கொள்ளலாம். அதோடு, பிரசவத்திற்கு பின்னான உபாதைகளை சரி செய்யவும் இது உதவுகிறது. முருங்கையை நீங்கள் சூப் வைத்தும் குடிக்கலாம். முருங்கைக்காயை பொரியல் செய்தும் நீங்கள் சாப்பிடலாம்.

 

12. கொண்டைக்கடலை:

இதில் புரதம் அடங்கியுள்ளது. அதோடு நுண்ணிய ஊட்டச்சத்துக்கள் பலவும் இருக்கிறது. கொண்டைக்கடலையை சுண்டலாக செய்து நீங்கள் சாப்பிடலாம்.

 

13. துளசி இலை:

இது மருத்துவ குணங்கள் அடங்கியதென்பதை நாம் அனைவரும் அறிவோம். அதோடு தாய்ப்பால் சுரப்புக்கும் அற்புதமான மருந்தாக துளசி திகழ்கிறது. இதனை சூடான நீருடன் சேர்த்து நாம் குடிக்க செய்யலாம்.

 

14. எள்ளு விதைகள்:

இதில் புரதம், கால்சியம், நார்ச்சத்து என பல வைட்டமின்கள் உள்ளன. நீங்கள் எள்ளுருண்டை செய்து கூட சாப்பிடலாம்.

 

15. பாதாம்:

பாதாம்பால் உங்களுடைய தாய்ப்பாலை அதிகரிக்க செய்யும் உணவாகும். பாதாமில் புரதச்சத்து, கால்சியம், ஆரோக்கியமான கொழுப்பு என பல அடங்கியுள்ளது.

 

16. ஆளி விதை:

ஆளி விதை, உங்களுடைய குழந்தையின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஒன்றாகும். இதிலுள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது.

 

17. இஞ்சி:

இஞ்சி மருத்துவ குணங்கள் அடங்கிய ஒன்றாகும். அதோடு தாய்ப்பாலை சுரக்கவும் உதவுகிறது. ஆனால், இஞ்சி எல்லோருக்கும் ஒத்துக்கொள்ளாது என்பதால் டாக்டர் ஆலோசனை பெற்று அதன் பிறகு சேர்த்துக்கொள்வது நல்லது.

 

18. பூசணி விதை:

பூசணி விதைகள் தாய்ப்பாலை சுரக்க செய்கிறது. இதில் புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து போன்றவை உள்ளது.

 

19. கருவேப்பிலை:

சுத்தமான கருவேப்பிலை இலை அல்லது அதனை முணுக்கிய பவுடரை உணவில் சேர்த்து சாப்பிடலாம். இது உங்களுடைய தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கிறது.

 

20. மஞ்சள்:

மருத்துவ குணங்கள் அடங்கியது மஞ்சள். மஞ்சளை வெந்தயம் மற்றும் இஞ்சியுடன் சேர்த்து பயன்படுத்தும்போது அது தாய்ப்பாலை அதிகரிக்க உதவுகிறது. மஞ்சளை சூப்பில் கலந்தும் நாம் குடிக்கலாம். கறியுடன் சேர்த்தும் உண்ணலாம்.

தாய்ப்பாலை இயற்கையான வழியில் அதிகரிக்க என்னவெல்லாம் செய்வது என்பதை இப்போது நாம் பார்த்தோம். இந்த பதிவு பயனுள்ளதாக இருந்திருக்குமென நாங்கள் நம்புகிறோம். பிள்ளையை பெற்ற ஒவ்வொரு அம்மாக்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

#breastfeeding

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.