• Home  /  
  • Learn  /  
  • 3 முதல் 5 வயது பிள்ளைகளின் கற்பனை திறனை வளர்க்கும் புத்தகங்கள்
3 முதல் 5 வயது பிள்ளைகளின் கற்பனை திறனை வளர்க்கும் புத்தகங்கள்

3 முதல் 5 வயது பிள்ளைகளின் கற்பனை திறனை வளர்க்கும் புத்தகங்கள்

26 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

நம்முடைய பிள்ளைகளுக்கு கதைகளை கேட்கவும், சொல்லவும் எப்போதுமே ஆசையாக இருக்கும். கதைகள் அவர்களின் கற்பனை திறனை வளர்க்க மட்டுமே உதவாமல், அவர்களின் சுய ஒழுக்கத்திற்கும் உதவுகிறது. நாம் எவ்வளவு புத்தகங்கள் வாசித்து காட்டுகிறோமோ, அவ்வளவு அறிவாற்றல் நிரம்பியவர்களாக அவர்கள் இருப்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். இப்போது நம்முடைய பிள்ளைகளின் கற்பனை திறனை வளர்க்கும் கதை புத்தகங்கள் எவை என்பதை பார்ப்போம்.

 

1. தெனாலி ராமன் கதை புத்தகம்

இவை அவர்களின் அறிவாற்றல் வளர உதவும் ஒரு கதைப்புத்தகமாகும். தெனாலி ராமனின் புத்திசாலித்தனத்தை அவர்கள் படிக்கும்போது, பல விதத்தில் யோசிக்கவும் தொடங்குகின்றனர். இவை நம்முடைய பிள்ளைகளின் தூக்கத்தை இனிமையாக்கும் ஒரு புத்தகமும் கூட. இந்த புத்தகத்தை அவர்களுக்கு வாசித்து காட்டும்போது, எல்லாம் நன்மைக்கே என்பதை புரிந்து உணர்ந்து வாழ்க்கையில் பொறுமையுடன் செயல்பட தொடங்குகின்றனர்.

 

2. அக்பர் பீர்பால் கதை புத்தகம்

அக்பர் மன்னரின் சபையிலிருந்த பீர்பால், அறிவு, சாமர்த்தியம், நகைச்சுவை ஆகியவற்றுக்கு பெயர் பெற்றவர். அவருடைய அறிவாற்றலை கண்டு மற்றவர்கள் பொறாமைப்பட்டாலும், அதனை தன்னுடைய சாமர்த்தியத்தால் எப்படி எல்லாம் வென்றார் என்பதை இந்த புத்தகம் சுவாரஸ்யமாக கூறுகிறது. குட்டி கதைகளை கொண்டிருக்கும் இந்த புத்தகம் நிச்சயம் நம் பிள்ளைகளின் அறிவாற்றல் திறனையும், கற்பனை திறனையும் வளர்க்க உதவும் ஒரு புத்தகமும் கூட.

 

3. வாழை இலை விருந்து

இந்த புத்தகம் நம்முடைய பிள்ளைகளுக்கு பல விதத்தில் உதவும் ஒரு புத்தகமும் கூட. எண்களை பற்றிய புரிதலையும், ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கத்தையும் இந்த புத்தகம் உண்டாக்குகிறது. எல்லோருடன் எப்படி அமர்ந்து மகிழ்ச்சியாக சாப்பிடுவது போன்றவற்றையும் கலர் படங்களை கொண்டு இந்த புத்தகம் காட்டுகிறது. இந்த புத்தகம் நம்முடைய பிள்ளைகளுக்கு உணவு குறித்த பல விஷயங்களை ஆர்வத்துடன் அறிய உதவுகிறது.

 

4. அழகு தமிழ் எழுதி பழகு

தமிழ் எழுத்துக்களை எழுத வைக்கும் ஆர்வத்தை உண்டாக்கும் ஒரு புத்தகமாகும். நம்முடைய பிள்ளைகளுக்கு தமிழ் எழுத்துக்களை குறித்த அடிப்படை புரிதலையும், அவற்றை சரளமாக பேசவும், எழுதவும் இந்த புத்தகம் உதவுகிறது. அதோடு கூடுதலாக நம்முடைய பிள்ளைகளின் கற்பனை திறனை வளர்க்கும் பல வித செயல்பாடுகளும் இந்த புத்தகத்தில் புதைந்துள்ளது.

 

5. சன், மூன் அண்ட் ஸ்டார்ஸ்

இந்த புத்தகம் இயற்கையை குறித்த பல பயனுள்ள தகவல்களை சுவாரஸ்யமான முறையில் விளக்குகிறது. கலர் கலரான கார்ட்டூன்கள் நிரம்பிய இந்த புத்தகம், படித்து அர்த்தத்தை அறிந்துக்கொள்ள ஆர்வத்தை தூண்டும் ஒரு புத்தகமும் கூட.

 

6. சைஸ் அண்ட் மெசேர்மென்ட்

இந்த புத்தகத்தில் பக்கத்துக்கு பக்கம் கலர் கலர் ஓவியங்கள் காணப்பட, நம்முடைய பிள்ளைகளுக்கு அளவீடு குறித்த பல தகவல்களை சுவாரஸ்யம் ததும்ப தருகிறது. இந்த புத்தகத்தின் உதவியோடு பெற்றோர்கள் பிள்ளைகளின் கற்பனை திறனை பல மடங்காக பெருக்கலாம்.

 

7. லைன்ஸ் அண்ட் கர்வ்ஸ் புக்

இந்த புத்தகம் நம்முடைய பிள்ளைகளுக்கு வடிவத்தை குறித்த புரிதலை கற்பனை ததும்ப தரும் ஒரு புத்தகமும் கூட. விதவிதமான போட்டோக்களுடன் வடிவத்தை சுவாரஸ்யமாக இந்த புத்தகம் நம்முடைய பிள்ளைகளுக்கு விளக்குகிறது.

 

8. சுவாரஸ்யமான குட்டிக்கதைகள்

இந்த புத்தகத்தில் எண்ணற்ற குட்டிக்கதைகள் தமிழில் உள்ளன. ஒவ்வொரு கதையும் ஏதாவது ஒரு நல்ல கருத்தை பதிவு செய்கிறது. இந்த புத்தகத்தில் படங்கள் எதுவும் இல்லையென்றாலும், பெற்றோர்கள் படித்து சொல்லி, பிள்ளைகளின் கற்பனை திறனை கேள்விகள் பல கேட்டு பெருக்கலாம்.

 

9. விக்கிரமாதித்தன் கதை புத்தகம்

வேதாளம், விக்கிரமாதித்தன் முதுகில் ஏறிக்கொண்டு பல கதைகள் சொன்னது நமக்கு தெரியும். இதனை நாமும் நம்முடைய பிள்ளைகளுக்கு சொல்லலாமே. நம் பிள்ளைகளின் கற்பனை திறனை வளர்க்கும் புத்தகங்களில் இதுவும் ஒன்று என்பதில் எந்தவித சந்தேகமுமே நமக்கு வேண்டாம்.

 

10. ஓரிகாமி: காகித மடிப்புக் கலையின் கதை

காகிதங்களை எப்போதும் கப்பல் விட தான் நம்முடைய பிள்ளைகள் பயன்படுத்துவர். ஆனால் இந்த ஓரிகாமி கலை கொண்டு காகிதத்தை நம்மால் பலவாறு செய்து நம்முடைய பிள்ளைகளை மகிழ்விக்கலாம். அதை பற்றிய இந்த புத்தகம் நம்முடைய பிள்ளைகளின் கற்பனை திறனை வளர்ப்பதற்கு ஆக சிறந்த எடுத்துக்காட்டும் கூட.

தோழிகளே, கதை வாசிக்கும் பழக்கத்தை சிறுவயதிலேயே உங்களின் பிள்ளைகளுக்கு ஏற்படுத்துங்கள். இது அவர்கள் நெறி தவறாமல் நடந்து, சமூகத்தில் நல்ல நிலையில் உயர நிச்சயம் உதவும். மீண்டும் ஒரு சுவாரஸ்யமான பதிவில் உங்களை எல்லாம் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#boostingchilddevelopment #earlylearning #mindfulparenting

A

gallery
send-btn

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.