• Home  /  
  • Learn  /  
  • முதல் முறையாக பிள்ளையுடன் கொண்டாட இருக்கும் தீபாவளி
முதல் முறையாக பிள்ளையுடன் கொண்டாட இருக்கும் தீபாவளி

முதல் முறையாக பிள்ளையுடன் கொண்டாட இருக்கும் தீபாவளி

1 Nov 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

இந்த முறை தீபாவளியை கொண்டாட இதோ சிறப்பு விருந்தினராக, நம்முள் ஒருவராக இருக்கும் நம் பிள்ளைக்கு இந்த நாளை மறக்க முடியாத, நினைவு பரிசாக கொடுக்க வேண்டுமல்லவா! அதற்கான சுவாரஸ்யம் மிகுந்த வழிகளை தான் நாம் இப்போது இந்த பதிவில் காணவிருக்கிறோம்.

பட்டாசுகளை இப்போது நாம் குறைத்தாலும், இன்னும் பல வழிகளில் ஸ்பெஷலாக இந்த தீபாவளியை நம்முடைய பிள்ளைகளுக்கு சிறப்பு பரிசாக வழங்க முடியும். தீபாவளி கொண்டாட்டங்கள் எவ்வளவு இருந்தாலும், நிச்சயம் நாம் அவர்களின் பாதுகாப்பு குறித்த விஷயங்களை எப்போதும் மனதில் கொண்டிருக்க வேண்டும்.

இந்த சமயம், நாம் புகையை அதிகம் ஏற்படுத்தும் பட்டாசுகளை குறைத்து, கம்பி மத்தாப்பு போன்றவற்றை மட்டுமே வாங்கி சிறப்பாக கொண்டாடலாம். இவை எந்தவிதத்திலும் இரைச்சலை உண்டாக்காது.

தீபாவளியை கொண்டாடும் அளவுக்கோ அல்லது உணரும் அளவுக்கோ நம்முடைய பிள்ளைகள் தயாராக இருக்க வாய்ப்பில்லை. நம்முடைய வீட்டில் கொண்டாட்டம் கலை கட்டி காணப்படும்போது, பிள்ளைகளை எக்காரணம் கொண்டு அப்படியே விட்டுவிட கூடாது.

 

பிள்ளைகளுடன் தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுவது எப்படி?

1. சத்தமாக வெடிக்கும் பட்டாசுகளுக்கு குட்பை சொல்லுங்கள்

பிள்ளைகள் இந்த வருடம் தான் தீபாவளியை பார்க்கிறார்கள் என்பதால், சத்தமாக வெடிக்கும் பட்டாசுகளை நாம் இப்போது தவிர்க்க வேண்டும். கம்பளியில் ஆன தொப்பி, மென்மையான மஃப்ளர், ஸ்கார்ப் போன்றவை உதவியுடன் அவர்கள் காதுகளை நாம் பாதுக்காக்கலாம். நம் வீட்டு ஜன்னல் கதவுகள் அடைத்திருப்பதை உறுதிசெய்யவும். சத்தம் அதிகம் கேட்காத அறையில் நம்முடைய பிள்ளைகள் இருப்பது நல்லது. காதுகளை பாதுகாக்கும்போது, ஸ்கார்ப் போன்றவை தொளதொளவென இல்லை என்பதையும் நாம் உறுதிசெய்ய வேண்டும்.

 

2. வீட்டில் உள்ள பிள்ளைகள் மீது கவனம்

உங்கள் வீட்டில் ஏற்கனவே பிள்ளைகள் இருந்தால், அவர்கள் பட்டாசு வெடிப்பதையும் கவனிக்கவும். அவர்கள் இரைச்சல் ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்கவில்லை என்பதை உறுதிசெய்யவும். அதோடு, கம்பி மத்தாப்பு, சாட்டை போன்றவற்றை அவர்கள் பிள்ளைகளுக்கு அருகில் கொண்டு வரவில்லை என்பதையும் உறுதிசெய்துக்கொள்ளவும். அதேபோல அவர்கள் பட்டாசுகளை பற்ற வைக்கும் இடங்களுக்கு அருகில், அவசர உதவிக்காக தண்ணீர் இருப்பதையும் உறுதிசெய்யவும்.

 

3. தனியாக விடாதீர்கள்

தீபாவளி என்றாலே சொந்தங்கள் எல்லாம் ஒன்று கூடுவார்கள். அதனால், நம்முடைய பிள்ளைகளை எக்காரணம் கொண்டும் தனியாக எப்போதும் விட்ட செல்ல கூடாது. ஏனென்றால், நம்முடைய பிள்ளைகளுக்கு புதிய முகங்களை பார்க்கும்போது கொஞ்சம் அசவுகரியமாக இருக்கும். அதனால், நாம் அவர்களுடன் இருப்பதை வாடிக்கையாக வைத்திருக்க வேண்டும்.

 

4. அகல்விளக்கு போன்றவை அருகில் வேண்டாம்

நம்முடைய பிள்ளைகளுக்கு அருகில் அகல்விளக்கு, குத்துவிளக்கு போன்றவை இல்லை என்பதை உறுதிசெய்யவும். ஏனென்றால், நம்முடைய பிள்ளைகளுக்கு இதன் வெளிச்சம் மற்றும் ஒளி மிகவும் பிடிக்கும். அதனால் காயம் ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது என்பதால் கட்டாயம் தூரத்தில் மட்டுமே வைக்கவும். அதேபோல, அவை வொயர்களுக்கு அருகில் இருக்கவும் கூடாது.

 

5. உணவு பழக்கவழக்கம்

நம் பிள்ளைகள் பிறந்து 1 வருடம் தான் ஆகிறது என்றால், அவர்கள் சாப்பிடுபவற்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையேல், வயிறு வலி, அசிடிட்டி, செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகள் இப்போது அவர்களுக்கு வரலாம். அவர்கள் சாப்பிடும் உணவில் காய்கறி மற்றும் பழங்கள் சேர்ப்பதையும் நாம் உறுதிசெய்ய வேண்டும்.

தோழிகளே, நம்முடைய பிள்ளைகளுடன் புதிதாய் கொண்டாடும் தீபாவளி நம்முடைய வீட்டில் கலைக் கட்டட்டும். அதனோடு, பாதுகாப்பாகவும் இந்த வருட தீபாவளி நாம் எல்லோருக்கும் அமையட்டும். மீண்டும் ஒரு சுவாரஸ்யமான பதிவில் சந்திக்கிறோம். அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள். நன்றி, வணக்கம்.

#babycare

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.